திவ்வியவதனம்
From Wikipedia, the free encyclopedia
திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்டது. இக்கதைகள் பண்டைய மூலசர்வாஸ்திவாத பௌத்த சாத்திரமாக வினய சாத்திரங்களில் காணப்படுகிறது.[1] இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என அறியப்படுகிறது.[2] [3] ஒரு தனி மனிதனின் முந்தைய பிறவிகளின் கர்மவினைகள், தற்போதைய பிறவியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை, கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துரைப்பது போன்று, இந்நூலின் கதைகள் அமைந்துள்ளன.[3]