தில்லையாடி வள்ளியம்மை
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
தில்லையாடி வள்ளியம்மை (22 பெப்ரவரி 1898 - 22 பெப்ரவரி 1914) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.[3] சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று காந்தியடிகள் சொன்னார்.[4]
விரைவான உண்மைகள் தில்லையாடி வள்ளியம்மை, பிறப்பு ...
தில்லையாடி வள்ளியம்மை | |
---|---|
தில்லையாடி வள்ளியம்மை | |
பிறப்பு | (1898-02-22)பெப்ரவரி 22, 1898 ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா |
இறப்பு | பெப்ரவரி 22, 1914(1914-02-22) (அகவை 16) தென்னாப்பிரிக்கா |
இறப்பிற்கான காரணம் | ஆங்கிலேய போலீசாரின் சித்ரவதைகள், காய்ச்சல்[1] |
கல்லறை | ஜோகானஸ்பேர்க் |
இருப்பிடம் | தென்னாப்பிரிக்கா |
தேசியம் | தென்னாப்பிரிக்கர் |
இனம் | தமிழர் |
அறியப்படுவது | தென்னாப்ரிக்கவாழ் இந்தியர்களுக்காக போராடியவர் |
சமயம் | கௌமாரம் |
பெற்றோர் | முனுசாமி முதலியார் - மங்களம்[2] |
மூடு