திருக்குறள் வீ. முனிசாமி
தமிழ் நாட்டு எழுத்தாளர், அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
திருக்குறள் வீ.முனுசாமி (Thirukkuralar V. Munusamy, செப்டம்பர் 26, 1913 - சனவரி 4, 1994)[1] தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1952-1957 காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
விரைவான உண்மைகள் திருக்குறள் வீ. முனுசாமி, நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை ...
திருக்குறள் வீ. முனுசாமி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1952–1957 | |
தொகுதி | திண்டிவனம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1913-09-26)26 செப்டம்பர் 1913 தொகைப்பாடி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 4 சனவரி 1994(1994-01-04) (அகவை 80) |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | ஞானாம்பாள் |
பிள்ளைகள் | 8 (6 மகன்கள் மற்றும் 2 மகள்கள்) |
பெற்றோர் | அ. வீராச்சாமி வீரம்மாள் |
வேலை | தமிழ் அறிஞர் , அரசியல்வாதி |
அறியப்படுவது | திருக்குறள் பரப்பும் பணி |
மூடு