திருகோணமலை தேர்தல் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
திருகோணமலை தேர்தல் தொகுதி (Trincomalee Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பிரதேசத்தை உள்ளடக்கியதாகும்.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் திருகோணமலை தேர்தல் தொகுதி திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.