திராவிடத் தேசியம்
From Wikipedia, the free encyclopedia
திராவிடத் தேசியம் (Dravidian nationalism or Dravidianism) என்பது தென் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய இன-மொழி மக்களை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் வளர்ந்தது. இந்த கருத்தானது 1930 களில் இருந்து 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென்னிந்தியர்கள் (திராவிடர்கள்) வட இந்தியர்களிடமிருந்து வேறுபட்ட இன மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் என்று கூறி வந்த சிறிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தொடர்ச்சியான பரப்புரைகளால் பிரபலமடைந்தது. இந்த இயக்கத்தினர் பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று கூறியது, அவர்கள் தென் இந்திய மக்களின் மீது தங்கள் மொழியான, சமஸ்கிருதத்தையும், சமயம் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை திணிக்கின்றனர் என குற்றஞ்சாட்டினர்.
பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமையிலான துவக்கக் கால திராவிட இயக்கமானது தென்னிந்தியாவின் அனைத்து திராவிட மொழி பேசும் மாநிலங்களையும் உள்ளடக்கிய சுதந்திர திராவிட நாடு வேண்டும் என்று கோரியது.[1] இந்த இயக்கமானது மற்ற திராவிட மக்களிடையே ஆதரவை பெற இயலாமல் தோல்வியுற்றது ஆனால் தமிழர்களிடையே ஓரளவு ஆதரவை பெற்றிருந்தது. 1930 இல் இருந்து 1950 வரையிலான காலகட்டங்களில் தமிழ் பேச்சாளர்களிடையே திராவிடத் தேசியமானது புதிய சித்தாந்தமாக உருவானது. ஆனால் மொழிவழி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியமே திராவிட தேசியம் என்ற பெயரில் இயங்கியது.
தமிழ்த் தேசியம் மூன்று கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டது: பிராமண மேலாதிக்கத்தை அகற்றுவது; "தனித்ததமிழுக்கு புத்துயிரூட்டுவது, சமூகச் சீர்திருத்தங்களாக, சாதி அமைப்பை ஒழித்தல், சமய நடைமுறைகள் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமையை மீட்டு அளித்தல் போன்றவை ஆகும்.
1960 களின் பிற்பகுதியால், திராவிட சிந்தனைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் அதிகாரத்தை பெற்றன.[2] பின்னர் தேசியக் கருத்துக்களாக தமிழ்த் தலைவர்களின் மத்தியில், குறைந்தபட்சம், தமிழர்கள் சுயாட்சி கொண்டிருக்க வேண்டும் அல்லது அதிகபட்சம் இந்தியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்பதாக இருந்தது [3]
திராவிடத் தேசியம் பல்வேறு கோட்பாடுகளை வளர்த்தது அதாவது கி.மு 16,000 இந்தியப் பெருங்கடலில் பரவி இருந்து மூழ்கிய குமரிக்கண்டம் குறித்த கருத்துகள், 10,000 ஆண்டுகளுக்கு முன்பு அசலான வேதத்தை எழுதியவர் மாமுனி மயனே என்னும் கருத்து, கி.மு. 50,000 இருந்த குமரிக் கண்ட நாகரீகம், கி.மு 6097 இல் பாண்டியனின்கீழ் செயல்பட்ட இரண்டாவது தமிழ்ச் சங்கம் போன்றவை.