![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Yoga_and_meditation_on_Lake_Titicaca_Bolivia.jpg/640px-Yoga_and_meditation_on_Lake_Titicaca_Bolivia.jpg&w=640&q=50)
தியானபிந்து உபநிடதம்
யோகக் கலையைப் பற்றிய இந்து உரை / From Wikipedia, the free encyclopedia
தியானபிந்து உபநிடதம் ( Dhyanabindu Upanishad ) என்பது பழங்கால சமசுகிருத உரையும் இந்து சமயத்தின் ஒரு சிறிய உபநிடமும் ஆகும். [3][4] இது நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[5]
தியானபிந்து | |
---|---|
![]() The Upanishad discusses meditation on the abundance within | |
தேவநாகரி | ध्यानबिन्दू |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | Dhyānabindu |
உபநிடத வகை | யோகக் கலை[1] |
தொடர்பான வேதம் | சாம வேதம் அல்லது அதர்வண வேதம் |
அத்தியாயங்கள் | 1 |
பாடல்களின் எண்ணிக்கை | கையெழுத்துப் பிரதியால் மாறுபடும்(~23 or 106)[2] |
இந்த உபநிடதத்தின் கையெழுத்துப் பிரதிகள் இரண்டு பதிப்புகளில் உள்ளன. [2] குறுகிய பதிப்பு 23 வசனங்களைக் கொண்டுள்ளது. மேலும் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[6] நீண்ட பதிப்பு 106 சுலோகங்களைக் கொண்டுள்ளது இது சாம வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[7][8] இந்த உரை தியான-பிந்தோபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது. [9]
உபநிடதம் யோகக் கலையில் தியானம் பற்றி விவாதிக்கிறது. தியானத்தின் போது மௌனம் அதிலுள்ள எல்லையற்ற நுணுக்கத்தை நினைவூட்டுவதாக கூறுகிறது. [10] ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஆன்மா இருப்பதாக வலியுறுத்துகிறது. மேலும் ஒரு யோகி எல்லாவற்றையும் முழுவதாக புரிந்து கொள்ள முற்பட வேண்டும் என்றும் கூறுகிறது.[6][11] நீண்ட பதிப்பில் ஆறு-நிலை யோகக் கலையின் நுட்பங்கள் உள்ளன.[12]