தலபுகா
கான் / From Wikipedia, the free encyclopedia
தலபுகா என்பவர் 1287 ஆம் ஆண்டு முதல் 1291 ஆம் ஆண்டு வரை மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான தங்க நாடோடி கூட்டத்தின் கானாக பதவி வகித்தார். இவரது தந்தை பெயர் தர்டு. இவரது கொள்ளுத்தாத்தா படு கான். இவர் நோகை கானின் உதவியுடன் பதவிக்கு வந்தார். எனினும் நான்கு வருடங்களுக்கு பிறகு நோகை கானே இவரை பதவி விலகச் செய்தார். நோகை கான் பிறகு தோக்தாவை பதவியில் அமர்த்தினார்.