தமிழ்நாடு விரைவுவண்டி
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு விரைவுத் தொடருந்து இந்திய ரயில்வேயினால் செயல்படுத்தப்படும் ஒரு ரயில் சேவையாகும். ஆகஸ்ட் 7, 1976 இல் இது தனது ரயில் சேவையினைத் தொடங்கியது. அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. [1]முதலில் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தெற்குப் பகுதியில் முக்கியப் பகுதியான தமிழ்நாட்டினை பெயராகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட, முதல் ரயில் சேவை இதுவாகும். இது சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லிக்கு இடையே செயல்படுகிறது. ராஜதானி எக்ஸ்பிரஸ் அல்லாமல் வேகமாக செல்லக்கூடிய ரயில் இதுவாகும். 1976 ஆம் ஆண்டில் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் ரயிலாக இருந்த இந்த ரயில்சேவை, பின்னர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும் ரயில் சேவையாக மாறியது. இந்த மாற்றம் 1982 ஆசிய விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு முன்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜூன் 1988 இல், மாதவ் ராவ் சிந்தியாவினால், தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது. இதில் குவாலியர் ரயில் நிலையமும் சேர்க்கப்பட்டது. [2] 12621 மற்றும் 12622 என்ற வண்டி எண்களுடன் செயல்படும் இந்த ரயில்சேவை, இந்திய ரயில்வேயின் பிரிவுகளில் அதிவிரைவு ரயில்சேவை என்ற பிரிவின்கீழ் இயங்குகிறது.