தமிழ் ஒலிப்புமுறை
From Wikipedia, the free encyclopedia
தமிழ் ஓர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலுக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக பலுக்குவதில் இருக்கும் சிக்கல்களை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலுக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஓர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும்.
“ | தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழுத்துக்கள் கூடி நிற்காதவை என்று பற்பல விதிகள் உள்ளன. பெருமுயற்சி இல்லாமலே சொற்களை ஒலிப்பதற்கு உதவும் விதிகள் தமிழில் உள்ளன. பாக், வீச், பாட், பத், துப், காற் என்று வல்லொலிகள் இறுதியில் அமைந்தால், ஒலிக்கும் முயற்சி அரிதாகின்றது. குற்றியலுகரம் சேர்த்து, பாக்கு, வீச்சு, பாட்டு, பத்து, காற்று என முயற்சியை எளிதாக்குவது தமிழ் வழக்கு. அதனாலேயே, இங்கிலாந்து, கிறிஸ்து முதலியன ஈற்றில் உகரம் பெறுகின்றன.[1] | ” |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Gnome-mime-sound-openclipart.svg/50px-Gnome-mime-sound-openclipart.svg.png)
நா சுழற்றி வாக்கியம்: "ஏழை கிழவன் வாழைப்பழத்தோல்மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்."
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Gnome-mime-sound-openclipart.svg/50px-Gnome-mime-sound-openclipart.svg.png)
நா சுழற்றி வாக்கியம்: "கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட"
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.