காளாஞ்சகப்படை (psoriasis) என்பது தோலில் ஏற்படும், ஒரு நீடித்த, தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும்[1] ஆகும். இது நமட்டுச்சொறி, நமட்டுச் சிரங்கு, அல்லது உரிதோல் அழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் தோல் மற்றும் மூட்டுகளை பாதிக்கும். இது பொதுவாக தோலில் சிவந்த செதில் போன்ற திட்டுக்களைத் தோற்றுவிக்கிறது. காளாஞ்சகப்படையினால் உண்டாகும் செதில் போன்ற திட்டுகள், சொரியாட்டிக் பிளெக்ஸ் என்று அழைக்கப்பட்டு, அழற்சி மற்றும் அதிகரித்த தோல் உற்பத்தி நடைபெறும் இடங்களாக விளங்குகின்றன. இந்த இடங்களில் தோல் அதிவேகமாக சேகரிக்கப்பட்டு ஒரு வெள்ளி-வெள்ளை நிற தோற்றத்தை அடைகிறது. சிவந்த தட்டைத் திட்டுகள் முழங்கைகள் மற்றும் முழங்கால்களின் தோல்களில் அடிக்கடி ஏற்படும். இந்த நோய் உச்சந்தலை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். படை நோயைப் போலல்லாமல் காளாஞ்சகப்படை மூட்டுகளின் நீட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படலாம்.

விரைவான உண்மைகள் காளாஞ்சகப்படை, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
காளாஞ்சகப்படை
A person whose back and arms are affected by psoriasis
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதோல் மருத்துவம்
ஐ.சி.டி.-10L40.
ஐ.சி.டி.-9696
ம.இ.மெ.ம177900
நோய்களின் தரவுத்தளம்10895
மெரிசின்பிளசு000434
ஈமெடிசின்emerg/489 Dermatology:derm/365 plaque
derm/361 guttate
derm/363 nails
derm/366 pustular
Arthritis derm/918
Radiology radio/578
Physical Medicine pmr/120
ம.பா.தD011565
மூடு

இந்தக் கோளாறு நாள்பட்டு தொடர்ந்து ஏற்படும் நிலையாகும். சிறிய குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் திட்டுகளாகவும் உடல் முழுவதையும் மூடும் அளவிற்கும் இந்த நோய் ஏற்படலாம். கை நகங்கள் மற்றும் கால்விரல் நகங்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டு (சொரியாடிக் நகத் திசு இறப்பு) தனித்த கண்டுபிடிப்பாக காணப்படலாம். இந்த காளாஞ்சகப்படை மூட்டுகளில் அழற்சியை கூட ஏற்படுத்தலாம். இது சொரியாட்டிக் கீல்வாதம் என்று அழைக்கப்படும். காளாஞ்சகப்படை உள்ளவர்களில் பத்து முதல் பதினைந்து சதவீத மக்கள் சொரியாடிக் கீல்வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காளாஞ்சகப்படை எதனால் ஏற்படுகிறது என்பது தெரியவரவில்லை. ஆனால் இந்த நோய் மரபு சார்ந்த காரணங்களினால் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. காளாஞ்சகப்படையை தீவிரமடைய செய்யக்கூடிய காரணிகளாவன: மன அழுத்தம், முறையான கார்டிக்கோஸ்டீராய்டிலிருந்து விலகிக் கொள்ளுதல், மதுவை அளவுக்கு அதிகமாக அருந்துதல் மற்றும் புகைத்தல்.[2] இந்த நோய்க்கு பல சிகிச்சைகள் கிடைக்கக் கூடியதாக உள்ளன. ஆனால் இதனுடைய நாள்பட்டு தொடர்ந்து ஏற்படும் தன்மையின் காரணத்தினால் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது.

வரலாறு

காளாஞ்சகப்படை மனிதர்களில் மிகவும் நெடுங்காலமாக அறியப்பட்டும் அதே நேரத்தில் மிகவும் அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நோய்களில் ஒன்றாகும். சில அறிஞர்கள் தடிப்புத்தோல் அழற்சி விவிலியத்தில் (விவிலியத்தில்) ட்சாரட் எனப்படும் தோல் பண்பு நிலைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பதாக நம்புகின்றனர்.[3] மிகவும் சமீபத்தில் காளாஞ்சகப்படை தொழுநோயின் வகைகளில் ஒன்றாக தொடர்ந்து விவரிக்கப்பட்டுவந்தது. கிரேக்கர்கள் செதிலுள்ள தோல் நிலைகளுக்கு லெப்ரா (λεπρα) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். நமைச்சலெடுக்கும் தோல் நிலைகளை விவரிக்க சோரா என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள். ஆங்கில தோல் நிபுணர்களான ராபர்ட் வில்லன் மற்றும் தாமஸ் பேட்மன் இருவரும் இந்த நோயை மற்ற தோல் நிலைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டினார்கள். அதனால் இது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லன்ஸின் லெப்ரா என்றழைக்கப்பட்டது. தொழுநோய் ஆனது முறையான வட்டமான திட்டுகள் கொண்டு தனித்திருப்பதாகவும், காளாஞ்சகப்படை எப்போதும் முறையற்று காணப்படுவதாகவும் அவர்கள் வேறுபடுத்தினர். வில்லன் இரண்டு வகைகளைக் கண்டுபிடித்தார்: லெப்ரோஸா கிரேகோரம் மற்றும் சோரா லெப்ரோஸா .[4]

பார்ப்பதற்கும் பிறகு சொற்பொருளியல் ரீதியாகவும் தொழுநோயுடன் அது குழப்பப்பட்டாலும் 1841 ஆம் ஆண்டில்தான் வியன்னாவின் தோல் நிபுணரான ஃபெர்டினண்ட் வான் ஹோப்ரா இந்த நிலைக்கு சொரியாசிஸ் என்ற பெயரை வழங்கினார். இந்த பெயர் சோரா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் நமைச்சல் ஆகும்.[5]

20 ஆம் நூற்றாண்டில் காளாஞ்சகப்படை குறிப்பிட்ட வகைகளாக மேலும் பிரிக்கப்பட்டது.

வகைகள்

Thumb
சிவந்த தட்டைத் திட்டு (பிளேக்) காளாஞ்சகப்படையினால் மூடப்பட்ட ஒரு கரம் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

காளாஞ்சகப்படையின் அறிகுறிகள் பல்வேறு வகைகளில் வெளிப்படலாம். சிவந்தத் தட்டை வடிவ திட்டு (பிளேக்), பஸ்டுலர், கட்டேட் மற்றும் ஃபிளக்சுரல் காளாஞ்சகப்படை ஆகியவை வேறுபாடுகளில் அடங்கும். இந்த பகுதி ஒவ்வொரு வகையையும் (ICD-10யுடன் உள்ள குறி பரணிடப்பட்டது 2006-07-09 at the வந்தவழி இயந்திரம்) விளக்குகிறது.[6]

சிவந்தத் தட்டை வடிவ காளாஞ்சகப்படை (சொரியாசிஸ் வல்கேரிஸ்) (L40.0 ) என்பது மிகவும் பொதுவான வடிவமான காளாஞ்சகப்படையாகும். காளாஞ்சகப்படையுள்ளவர்களில் 80 முதல் 90 சதவீதத்தினரை இது பாதிக்கிறது. சிவந்தத் தட்டை வடிவ காளாஞ்சகப்படை குறிப்பாக அழற்சியேற்பட்ட தோலில் எழும்பிய பகுதிகளாக தோன்றி வெள்ளிநிற வெள்ளை செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் சிவந்தத் தட்டை வடிவ தடிப்புத் தோல் (பிளேக்ஸ்) என்றழைக்கப்படுகிறது.

ஃபிளக்சுரல் (வளைவு வடிவ) காளாஞ்சகப்படை (நேர்மாறான காளாஞ்சகப்படை) (L40.83-4) தோலில் வழுவழுப்பான அழற்சியுற்ற திட்டுகளாக தோற்றமளிக்கிறது. இது தோல் மடிப்புகளில் குறிப்பாக, பிறப்புறுப்புகள் (தொடைக்கும் கவட்டைக்கும் இடையே), அக்குல்கள், எடை கூடிய வயிற்றுக்குக் (படலம்) கீழே மற்றும் மார்பகங்களுக்குக் கீழே (முலையின் கீழான மடிப்பு) ஏற்படுகிறது. இது உராய்வு மற்றும் வியர்வையின் காரணத்தினால் நோயை அதிகரிக்கிறது. பூஞ்சைத் நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பை இது அதிகரிக்கிறது.

கட்டேட் காளாஞ்சகப்படை (L40.4) என்பது எண்ணற்ற சிறிய வட்டவடிவ புள்ளிகளால் அறியப்படுகிறது (மாற்று அறுதியிடல் - உரோகப்பொடுகுதிர்வு (பிட்டிரியாசிஸ் ரோசியா) - முட்டை வடிவ நசிவு). காளாஞ்சகப்படையின் இந்த எண்ணற்ற புள்ளிகள், உடலின் பெரும் பகுதிகளான முண்டம், கைகால்கள் மற்றும் உச்சந்தலையில் தோன்றுகிறது. கட்டேட் காளாஞ்சகப்படை ஸ்டிரெப்டோகாக்கல் தொண்டை நோய்த்தொற்றுடன் தொடர்புடையதாக உள்ளது.

பஸ்டுலர் காளாஞ்சகப்படை (L40.1-3, L40.82) நோய்த்தொற்று-ஏற்படுத்தாத சீழால் நிரப்பப்பட்ட எழும்பின கட்டிகளாக (சீழ்க்கட்டிகள்) தோன்றுகிறது. சீழ்க்கட்டிகளின் கீழேயும் அதை சுற்றியும் இருக்கிற தோல் சிவந்து மென்மையாக காணப்படும். பஸ்டுலர் (கொப்புள) காளாஞ்சகப்படை, ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொதுவாக கைகள் மற்றும் கால்களில் (பால்மோபிளாண்டார் பஸ்டுலோசிஸ்) அல்லது பொதுவாக உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் சீரற்று தோன்றலாம்.

நக காளாஞ்சகப்படை (L40.86) கை மற்றும் கால் நகங்களின் மேல்புறத்தில் பலதரப்பட்ட மாற்றங்களை உண்டாக்குகிறது. நகத்தட்டுக்கு கீழே நிறமாறுதல், நகங்களில் குழி விழுதல், நகங்களுக்கு ஊடாக கோடுகள் செல்லல், நகத்துக்கு கீழேயுள்ள தோல் தடித்தல் மற்றும் நகம் தளர்ந்து (ஆன்கோலைசிஸ்) நொறுங்குதல் ஆகியவை இந்த மாற்றங்களில் அடங்கும்.

தடிப்புத் தோலழற்சி கீல்வாதத்தில் (L40.5) மூட்டு மற்றும் இணைப்புத் திசு அழற்சியும் அடங்கும். தடிப்புத் தோலழற்சி கீல்வாதம் எந்த மூட்டிலும் வரலாம் ஆனால் கை கால் விரல்களின் மூட்டுகளில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. ஒரு உருளை-வடிவத்தில் கைகள் மற்றும் கால்களின் விரல்களில் வீக்கத்தை உண்டாக்கும். இது விரல் அழற்சி (டாக்டிலைடிஸ்) என்றழைக்கப்படுகிறது. தடிப்புத் தோலழற்சி கீல்வாதம் இடுப்புகள், மூட்டுகள் மற்றும் முதுகெலும்பையும் (முதுகெலும்பு அழற்சி) பாதிக்கலாம். தடிப்புத் தோலழற்சி கொண்ட 10 முதல் 15 சதவீதத்தினருக்கு தடிப்புத் தோலழற்சி கீல்வாதமும் உள்ளது.[மேற்கோள் தேவை]

சிவந்த தோல் சார்ந்த தடிப்பு தோல் அழற்சியில் (எரித்ரோடெர்மிக் சொரியாசிஸ்) (L40.85) உடம்பின் பெரும்பாலான இடங்களில் அழற்சி படர்ந்து தோல் உரிதலை ஏற்படும். அத்துடன் கடுமையான நமைச்சல், வீக்கம் மற்றும் வலியும் சேர்ந்து ஏற்படலாம். இது அவ்வப்போது நிலையற்ற சிவந்தத் தட்டை வடிவ காளாஞ்சகப்படை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக மண்டலிய சிகிச்சையை திடீரென்று நிறுத்துவதை தொடர்ந்து ஏற்படுத்துகிறது. கடுமையான அழற்சியும் தோலுரிதலும் உடம்பின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மற்றும் தோலின் தடுப்பு இயக்கங்களை பாதிக்கிறது. இதனால் காளாஞ்சகப்படையின் இந்த வகை இறப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கிறது.[7]

மருத்துவ வகைப்பாடு

காளாஞ்சகப்படை என்பது நாள்பட்டு திரும்பத் திரும்ப ஏற்படும் தோல் நோயாகும். இது கொப்புளமற்ற மற்றும் கொப்புள (பஸ்டுலர்) வகைகளாக வகைப்பிரிக்கப்படலாம். அவையாவன[8]:414:

  • கொப்புளமற்ற காளாஞ்சகப்படை
    • சொரியாசிஸ் வல்கேரிஸ் (நாள்பட்டு ஒரே இடத்தில் இருக்கும் காளாஞ்சகப்படை, சிவந்த தட்டை வடிவ திட்டு போன்ற காளாஞ்சகப்படை)
    • காளாஞ்சகப்படை சார்ந்த சிவந்த தோல் (சிவந்த தோல் சார்ந்த காளாஞ்சகப்படை)
  • பஸ்டுலர் (கொப்புள) காளாஞ்சகப்படை
    • பரவிய பஸ்டுலர் காளாஞ்சகப்படை (வான் சும்புச்சியின் பஸ்டுலர் காளாஞ்சகப்படை)
    • பஸ்டுலோசிஸ் பால்மாரிஸ் மற்றும் மற்ற அங்கால் தசை (நிலையான பல்மோப்ளாண்டர் பஸ்டுலோசிஸ், பார்பர் வகையின் பஸ்டுலர் காளாஞ்சகப்படை, உடல் முனைகளின் பஸ்டுலர் காளாஞ்சகப்படை).
    • வளைய வடிவ பஸ்டுலர் காளாஞ்சகப்படை
    • கை கால் தோலழற்சி கண்டினுவா
    • சிரங்கு ஹெர்பிடிஃபோர்மிஸ்

காளாஞ்சகப்படையின் மற்ற வகைகளாவன[9]:191-197:

  • மருந்து-தூண்டிய காளாஞ்சகப்படை
  • நேர்மாறான காளாஞ்சகப்படை
  • அணையாடை (நாப்கின்) காளாஞ்சகப்படை
  • சிவந்த தோல் அழற்சி போன்ற காளாஞ்சகப்படை

நோய் அறுதியிடல்

காளாஞ்சகப்படையின் நோய் அறுதியிடல் பொதுவாக தோலின் தோற்றத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. காளாஞ்சகப்படைக்கு சிறப்பான இரத்த பரிசோதனைகள் அல்லது நோய் அறுதியிடும் செயல்முறைகள் எதுவும் கிடையாது. சில நேரங்களில் மற்ற கோளாறுகள் இல்லையென்பதையும் நோயறுதியிடுதலை உறுதிப்படுத்துவதற்கு உடல் திசு ஆய்வு (பையாப்ஸி) அல்லது உடல் தோல் மாதிரி எடுத்தல் (ஸ்கிரேபிங்க்) ஆகியவை தேவைப்படலாம். காளாஞ்சகப்படையின் அறுதியிடல் முடிவு நேர்மறையாக (பாசிட்டிவ்) இருந்தால் உடல் திசு ஆய்வுவின் தோல் மாதிரியில் பின்னல் ஆப்புகளைக் காண்பிக்கும். காளாஞ்சகப்படையின் மற்றொரு அடையாளம் தட்டை வடிவத் தடிப்புத் தோல்கள் (பிளேக்ஸ்) சுரண்டப்படும்போது குறிப்பிட்ட இடங்களில் தோலின் கீழிருந்து இரத்தக் கசிவைக் காணலாம் (ஆஸ்பிட்ஸின் அடையாளம்).

நோயின் தீவிரத்தன்மை

காளாஞ்சகப்படை பொதுவாக லேசான (உடலின் 3 சதவீதத்திற்கும் குறைவாக பாதிப்பது), மிதமான (உடலின் 3 முதல் 10 சதவீதம் வரை பாதிப்பது) அல்லது கடுமையானதாக தரவரிசைப்படுத்தப்படுகிறது.[மேற்கோள் தேவை] காளாஞ்சகப்படை நோயின் தீவிரத்தன்மையை அளவிடுவதற்கு பல ஒப்பளவுகள் இருக்கின்றன. தீவிரத்தின் வீரியம் பொதுவாக பின்வரும் காரணிகளின் அடிப்படையில் உள்ளது: பாதிக்கப்பட்ட உடலின் மேல்புற பகுதி பாதிக்கப்படுதலின் விகிதாச்சாரம்; நோய் செயல்பாடு (தட்டை வடிவ திட்டு சிவத்தல், தடித்தல் மற்றும் அளவுகளின் வீரியம்); முந்தைய சிகிச்சைமுறைகளுக்கான பதிலளிப்பு மற்றும் ஒரு நபருக்கு இருக்கும் நோயின் தாக்கம்.

காளாஞ்சகப்படை பகுதி நோய்த் தீவிரத்தன்மை உள்ளடக்கம் (PASI) என்பது காளாஞ்சகப்படையை அளவிடுவதற்கு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவியாகும். PASI நைவுப்புண்களின் தீவிரத்தின் மதிப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியை ஒரே மதிப்பெண்ணாக சேர்த்து 0 (நோயில்லை) முதல் 72 (அதிக்கப்பட்ச நோய்) என்ற வீச்சில் மதிப்பிடுகிறது.[10] எனினும், PASI சோதனைகளுக்கு வெளியே பயன்படுத்தப்படும்போது மிகவும் சிக்கலானதாக இருக்கக் கூடியதால், இந்த அகவரிசை நோய்சார்ந்த மருத்துவ பயன்பாட்டிற்கு எளிமையாக்க்குவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.[11]

வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் தாக்கம்

காளாஞ்சகப்படை உளச்சோர்வு, இதயத்திசு இறப்பு, உயர் இரத்த அழுத்தம், இரத்தச்சேர்க்கை இதய செயலிழப்பு அல்லது வகை 2 நீரழிவு போன்ற மற்ற நாட்பட்ட நோய்கள் உடல்நலம் சார்ந்த வாழ்க்கைத் தரத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதை போலவே பாதிப்புகள் ஏற்படுத்துவதாக காணப்பட்டுள்ளது.[12] நோய்நிகழ்வின் தீவிரம் மற்றும் இடத்திற்கேற்ப தனிநபர்கள் குறிப்பிடத்தக்க உடல் அசௌகரியம் மற்றும் கொஞ்சம் செயலிழப்பையும் அனுபவிக்கலாம். சுய-பராமரிப்பு, நடை மற்றும் தூக்கம் போன்ற அடிப்படை செயல்பாடுகளில் நமைச்சலும் வலியும் இருக்கலாம். கைகளிலும் கால்களிலும் தட்டைவடிவ தடிப்பு தோல்கள் ஏற்படுவதினால் சில நபர்களைக் குறிப்பிட்ட தொழில்கள் செய்தல், சில விளையாட்டுகளை விளையாடுதல் மற்றும் ஒரு வீடு அல்லது குடும்ப அங்கத்தினர்களைப் பராமரித்தல் போன்ற செயல்களை செய்வதை தடுக்கலாம். உச்சந்தலையிலுள்ள தட்டை வடிவ தடிப்புத் தோல்கள் குறிப்பாக மிகவும் சங்கடமாக இருக்கலாம். ஏனென்றால் முடியில் உள்ள செதில் போன்ற தட்டை வடிவ தோல்கள் பொடுகாகதவறாக எண்ணப்படலாம். மருத்துவ பராமரிப்பு அதிக செலவாவதாகவும் நேரம் எடுப்பதாகவும் இருக்கலாம் இது பணிக்கு அல்லது பள்ளிக்கு செல்வதில் இடையூறை ஏற்படுத்தலாம்.

காளாஞ்சகப்படையுள்ளவர்கள் தங்களுடைய தோற்றத்தைக் குறித்து தன்னுணர்வு உடையவர்களாகவும் பொதுவாழ்க்கையில் நிராகரிக்கப்படுவதின் அச்சம் மற்றும் பாலியல் மனநல கரிசனைகளிலிருந்து தோன்றும் ஒரு மோசமான சுய-அபிப்ராயம் உள்ளவர்களாகவும் காணப்படலாம். மனநலம் சார்ந்த துயரம், குறிப்பிடத்தக்க உளச்சோர்வை ஏற்படுத்தலாம், மேலும் சமூகத் தனிமைக்கும் கொண்டு செல்லலாம்.

தேசிய காளாஞ்சகப்படை நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் 426 காளாஞ்சகப்படை அவதியுறுபவர்களிடத்தில் செய்யப்பட்ட ஒரு கருத்தாய்வில், 71 சதவீதத்தினர் இந்த நோய் அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருக்கிறதென்று அறிவித்திருக்கின்றனர். பாதிக்கு மேற்பட்டவர்கள் தன்னிலையுணர்வு (63%) மற்றும் சங்கடம் (58%) ஆகிய உணர்வுகளால் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர். மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டோர் சமூக நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதாகவும் எதிர்ப்பாலருடன் நேரம் செலவிடுவது மற்றும் நெருங்கிய பழக்கங்களை குறைந்த அளவே வைத்துக் கொள்வதாகவும் அறிவித்தனர்.[13]

காளாஞ்சகப்படை மற்றும் மற்ற தோலியல் சார்ந்த கோளாறுகள் கொண்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை அளவிட பல அளவுகோல்கள் இருக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சி, தனிநபர்கள் அவ்வப்போது வாழ்க்கைத் தரத்தில் ஒரு குறைவை உணர்வதாக சுட்டிக் காட்டியுள்ளது.[14] 2009 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தோலியல் நிபுணர்களுடனான நேர்காணல்கள் மற்றும் நோயாளிகளின் அபிப்ராயங்களை ஆராய்ந்து காளாஞ்சகப்படையின் தாக்கத்தை ஆய்வு செய்த. லேசான மற்றும் கடுமையான காளாஞ்சகப்படையில் நமைச்சலே வாழ்க்கைத் தரம் (HRQoL) குறைவதற்கான முக்கிய காரணமாக காணப்பட்டது.[15]

புறப்பரவியல்

காளாஞ்சகப்படை இரண்டு பாலினத்தாரையும் சமமாக பாதிக்கிறது மற்றும் எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் அது மிகவும் பொதுவாக 15 முதல் 25 வயதுக்குள் முதல் முறையாகத் தோன்றுகிறது.

மேற்கத்திய மக்கள்தொகைளில் காளாஞ்சகப்படையின் பாதிப்பு சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை அனுமானிக்கப்படுகிறது. யுனைட்டட் கிங்டம்மில் உள்ள பொது மருத்துவர்களிடம் 7.5 மில்லியன் பதிவுசெய்யப்படப்பட்ட நோயாளிகள் உள்ளனர். அவர்களில் காளாஞ்சகப்படையின் பாதிப்பு உள்ளவர்கள் 1.5 சதவீதத்தினராக இருந்தனர்.[16] ஒரு கருத்தாய்வு[17] தேசிய காளாஞ்சகப்படை நிறுவனத்தினால் (US காளாஞ்சகப்படை கல்வி மற்றும் ஆதரவுக் குழு) நடத்தப்பட்டது. அந்தக் கருத்தாய்வில் காளாஞ்சகப்படை வயது வந்த அமெரிக்கர்களில் 2.1 சதவீதத்தினரில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. காளாஞ்சகப்படையுள்ளவர்களில் சுமார் 35 சதவீதத்தினர் மிதமானது முதல் கடுமையான காளாஞ்சகப்படையுள்ளவர்களென்று வரையறுக்கபடமுடியுமென்று அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

காளாஞ்சகப்படையுள்ள சுமார் மூன்றில் ஒருவருக்கு நோயின் குடும்ப வரலாறு இருக்கிறதென்று கூறியிருக்கிறார்கள். மேலும் ஆராய்ச்சியாளர்கள் இந்த நிலையுடன் மரபியல் பகுதி (லோகை) சம்பந்தத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே முட்டையிலிருந்து உருவான இரட்டையர்களை ஆய்வு செய்ததில் அப்படிப்பட்ட இரட்டையர்களில் ஒருவருக்கு காளாஞ்சகப்படை இருந்தால் மற்றவருக்கும் 70% இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக் காட்டுகிறது. இரண்டு முட்டைகளிலிருந்து உருவான இரட்டையர்களில் இந்த ஒற்றுமை சுமார் 20% இருக்கிறது. காளாஞ்சகப்படை வருவதற்கு வம்சாவளி காரணங்களும் சுற்று சூழலும் காரணமாயிருக்கிறலாம் என்று இந்த கண்டுபிடிப்புகள் அறிவுறுத்துகின்றன.[18]

40 வயதுக்கு முன்பாக வந்தால் மரபியல் காரணங்களினால் வந்ததற்கான அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் அப்படி வந்தால் காளாஞ்சகப்படை அதிக கடுமையானதாகவும் திரும்ப திரும்ப வருவதாகவும் காணப்படுகிறது.

மரபியல் சார்ந்த காரணங்கள்

காளாஞ்சகப்படையில் பெரிய அளவிலான வம்சாவளி காரணம் இருக்கிறது. இதில் பல மரபணுக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒன்றாக எப்படி வேலை செய்கின்றன என்பது தெளிவாக இல்லை. பெரும்பாலானவை நோயெதிர்ப்பு மண்டலத்துடன் தொடர்புடையவையாக உள்ளன. குறிப்பாக மேஜர் ஹிஸ்டோகம்பேடிபிலிட்டி காம்ப்ளெக்ஸ் (MHC) மற்றும் T உயிரணுக்கள். மரபியல் ஆய்வுகளின் முக்கிய பயன் என்னவென்றால் அவை மூலக்கூறுகளில் செயல்பாடுகளை கண்டுபிடித்து எதிர்கால ஆய்வு மற்றும் சாத்தியமான மருந்துகளுக்கான வழிகளை வகுக்கின்றன.[19]

மரபணு தொடர்பு பகுப்பாய்வு, வெவ்வேறு நிறமிகளில் (குரோமோசோம்களில்) ஒன்பது இடங்கள் (லோகை) காளாஞ்சகப்படையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக கண்டுபிடித்துள்ளது. காளாஞ்சகப்படை ஏற்புத்திறன் 1 முதல் 9 (PSORS1 முதல் PSORS9 வரை) என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களுக்குள் மரபணுக்கள் இருக்கின்றன. பெரும்பாலான மரபணுக்கள் அழற்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அந்த மரபணுக்களின் சில வேறுபாடுகள் (சடுதி மாற்றங்கள்) காளாஞ்சகப்படையில் பொதுவாக காணப்படுகின்றன.[19]

மிகப் பெரிய காரணி PSORS1 ஆக இருக்கிறது. இந்த நோய் வம்சாவளியாக வருவதற்கு இது 35 முதல் 50 சதவீதம் வரை காரணமாயிருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் அல்லது காளாஞ்சகப்படையில் தோலில் மிகப் பெரிய அளவுகளில் காணப்படும் புரதங்களைக் குறியிடும் மரபணுக்களைக் கட்டுப்படுத்துகிறது. PSORS1 MHCயில் நிறமி 9ல் காணப்படுகிறது. இது முக்கியமான நோயெதிர்ப்பு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. PSORS1 இடத்திலுள்ள மூன்று மரபணுக்கள் சொரியாசிஸ் வல்கேரிஸுடன் நெருக்கமான தொடர்புடையதாக உள்ளன: MHC பிரிவு I புரதத்தை குறியிடும் HLA-C மாற்றுரு HLA-Cw6; காளாஞ்சகப்படையுள்ள மேல் தோலில் (சொரியாடிக் எபிடர்மிஸில்) அதிகமாக வெளிப்படும் ஒரு சுருண்டிருக்கும் புரதத்தைக் குறியிடும் CCHCR1 மாற்றுரு WWC; மணிபோன்ற மற்றும் கூம்புவடிவான மேல் தோல் அடுக்குகளில் காணப்பட்டு காளாஞ்சகப்படையில் அதிகமாக வெளிப்படும் கார்னியோடெஸ்மோசினை குறியிடும் CDSM மாற்றுரு அலீல் 5.[19]

மரபணு தொடர்பு ஸ்கேன்கள், காளாஞ்சகப்படைக்கே உடைய மாற்றுருக்களுக்கேற்ப திருத்தியமைக்கப்பட்ட மற்ற மரபணுக்களை கண்டுபிடித்துள்ளன. இந்த மரபணுக்கள் அழற்சி அறிகுறி புரதங்களை வெளியிடுகின்றன. இது காளாஞ்சகப்படை தடுப்பதில் ஈடுப்பட்டிருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திலுள்ள அணுக்களை பாதிக்கிறது. மரபணுக்கள் சில, தன் தடுப்பாற்று நோய்களிலும் ஈடுபட்டுள்ளன.[19]

ஆய்விலிருக்கும் இரண்டு முக்கிய மரபணுக்கள் IL12B மற்றும் IL23R ஆகும். நிறமி 5qவிலுள்ள IL12B இண்டர்லூகின்-12Bயை வெளிப்படுத்துகிறது. நிறமி 1pயிலுள்ள IL12B இண்டர்லூகி-23 ஏற்பியை வெளிப்படுத்தி T செல் வேறுபாட்டில் ஈடுபட்டுள்ளது. காளாஞ்சகப்படையை உண்டாக்கும் அழற்சி செயல்பாட்டில் T உயிரணுக்கள் ஈடுபட்டுள்ளன.[19]

இந்த மரபணுக்கள், அழற்சியில் ஈடுபடுகின்ற இரண்டு மரபணுக்களான கட்டித் திசு அழியும் காரணி- α மற்றும் அணுக்கரு காரணி κBயை அதிகமாக வெளிப்படுத்தும் பாதையில் காணப்படுகிறது.[19]

தடுப்பாற்றலியல் சார்ந்த காரணிகள்

காளாஞ்சகப்படையில் நோயெதிர்ப்பு அணுக்கள் அடித்தோலிருந்து மேல்தோலுக்கு நகர்கின்றன. அங்கு அவை மேல்தோல் அணுக்கள் (கெரடினோசைட்ஸ்) பெருக்கமடையும்படி தூண்டிவிடுகின்றன. தடிப்புத் தோலழற்சி ஒரு உண்மையான தன் தடுப்பாற்று நோயில்லை.[19] ஒரு தன் தடுப்பாற்று நோயில் நோயெதிர்ப்பு மண்டலம் ஒரு சாதாரண உடல் பாகத்தின் வெளியிலிருந்து வந்த உடற்காப்பு ஊக்கியென்று (ஆண்டிஜன்) எண்ணி குழம்பி இரண்டையுமே தாக்குகிறது. ஆனால் காளாஞ்சகப்படையில், அழற்சி வெளியிலிருந்துவரும் உடற்காப்பு ஊக்கிகளினால் உண்டாவது போல் தெரியவில்லை (DNAவிற்கும் நோயெதிர்ப்புத் தூண்டும் சக்தி இருக்கத்தான் செய்கிறது). ஆராய்ச்சியாளர்கள் காளாஞ்சகப்படையில் ஈடுபட்டுள்ள பல நோயெதிர்ப்பு அணுக்களையும் அழற்சியை ஒருங்கிணைக்க அவை ஒன்றுக்கொன்று அனுப்பும் வேதியியல் குறிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த செயல்முறையின் முடிவில், கிளைகொள் (டெண்டிரைடிக்) உயிரணுக்கள் மற்றும் T உயிரணுக்கள் போன்ற நோயெதிர்ப்பு அணுக்கள் அடித்தோலிலிருந்து மேல்தோலுக்கு செல்கின்றன. அங்கு அவை அழற்சியை உண்டுபண்ணும் கட்டித் திசு அழியும் காரணி-α, இண்டர்லூகின்-1β மற்றும் இண்டர்லூகின்-6 போன்ற வேதியியல் குறிகளையும் மேல் தோலணுக்கள் பெருக்கமடையக் காரணமாக இருக்கும் இண்டர்லூகின்-22ஐயும் சுரக்கின்றன.[19]

நோயெதிர்ப்பு மண்டலம், ஒரு பிறவி நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஒரு தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பை கொண்டுள்ளது.

பிறவி அமைப்பில், நோய்க்கிருமிகளில் காணப்படும் குறிப்பிட்ட புரதங்களையும் மற்ற உடற்காப்பு ஊக்கிகளையும் இலக்கிட உருவாகியுள்ள ஏற்பிகளை நோயெதிர்ப்பு அணுக்கள் கொண்டுள்ளன. தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பில், நோயெதிர்ப்பு அணுக்கள் இதற்கு முன்னால் ஒருபோதும் கண்டிராத மற்றும் அவைகளிடம் மற்ற அணுக்களால் அளிக்கப்படும் புரதங்களுக்கும் மற்ற உடற்காப்பு ஊக்கிகளுக்கும் பதிலளிக்கின்றன. பிறவி அமைப்பு அவ்வப்போது உடற்காப்பு ஊக்கிகளை தகவமைப்பு அமைப்புக்கு வழங்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலம் ஒரு ஆரோக்கியமான உடற்பாகத்தை வெளியிடத்து உடற்காப்பு ஊக்கியென்று தவறாக அடையாளம் கண்டுபிடித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் தன்தடுப்பாற்றலில் செயல் புரிவதைப் போன்றே அந்த புரதத்தையும் தாக்குகிறது.

காளாஞ்சகப்படையில் DNA ஒர் அழற்சி தூண்டியாக உள்ளது. DNA, நோயெதிர்ப்பு தூண்டும் குறியான இண்டர்ஃபெரான் - α ஐ உண்டாக்கும் பிளாஸ்மசைடாய்டு கிளைகொள் உயிரணுக்களிலுள்ள ஏற்பிகளை தூண்டுகிறது (சைட்டோகைன்). காளாஞ்சகப்படையில் மேல் தோலணுக்கள் நுண்ணுயிர்க்கொல்லி புரதக்கூறுகளை உருவாக்கின்றன. கிளைகொள் உயிரணுக்கள் மற்றும் T உயிரணுக்களுக்கு பதிலளிக்குமாறு அவை இண்டர்லூகின்-1, இண்டர்லூகின்-6 மற்றும் கட்டியழியும் காரணி -α போன்ற சைட்டோகைன்களை உண்டாக்குகின்றன. அவை கூடுதல் அழற்சியுண்டாக்கும் அணுக்கள் வந்து மேலும் அழற்சியை உண்டாக்கக் குறியளிக்கின்றன.[19]

கிளைகொள் உயிரணுக்கள் பிறவி மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்புகளுக்கு பாலமாக விளங்குகின்றன. இவை காளாஞ்சகப்படையிலுள்ள நைவுப் புண்களில் அதிகரித்து T அணுக்கள் மற்றும் வகை 1 உதவி T உயிரணுக்களின் பெருக்கமடைதலைத் தூண்டுகின்றன. சில கிளைகொள் அணுக்கள் கட்டியழிவு காரணி-ஆஃபாவை உண்டாக்கக் கூடும். இவை அதிகமான நோயெதிர்ப்பு உயிரணுக்களை அழைத்து அதிகமான அழற்சியை தூண்டிவிடுகிறது இலக்கிடப்பட்ட தடுப்பாற்றடக்கு மருத்துவமும் சோலரென் மற்றும் புறஊதா A (PUVA) சிகிச்சைமுறையும் கிளைகொள் உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.[19]

T உயிரணுக்கள் அடித்தோலிலிருந்து மேல் தோலுக்கு நகர்கின்றன. மேல்தோலிலுள்ள இணைப்புத்திசு வெண்புரதத்தில் இருக்கும் ஒரு குறியளிக்கும் மூலக்கூறான ஆல்ஃபா-1 பீட்டா-1 இண்டகிரின் மூலமாக, அவை மேல் தோலுக்கு ஈர்க்கப்படுகின்றன தடிப்புத் தோலழற்சி T உயிரணுக்கள் இண்டர்ஃபெரான்-γ மற்றும் இண்டர்லூகின்-17ஐ சுரக்கின்றன. இண்டர்லூகின்-17 இண்டர்லூகின்-22டுடன் தொடர்புடையதாக உள்ளது. இண்டர்லூகின்-22 மேல் தோலணுக்கள் பெருக்கமடையத் தூண்டுகிறது.[19]

ஒரு கருதுகோள் என்னவென்றால் காளாஞ்சகப்படையில் கட்டுப்படுத்தும் T உயிரணுக்கள் மற்றும் கட்டுப்படுத்தும் சைட்டோகைன் இண்டர்லூகின்-10ன் சேதம் ஏற்படுகிறதென்பதாகும்.[19]

குழந்தைகளில் காளாஞ்சகப்படை

காளாஞ்சகப்படை குழந்தைகளை பாதிக்கலாம். காளாஞ்சகப்படை நோயாளிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினருக்கு 20 வயதுக்கு முன்பே நோய்க் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.[20] நோயின் காரணமாக தன்மதிப்பும் நடத்தையும் பாதிக்கப்படலாம். மருத்துவ ஆராய்ச்சியில் சண்டையிடுதலும் இருப்பதாகக் காணப்பட்டது.[21]

காரணம்

காளாஞ்சகப்படை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. நோய் உருவாவதில் உள்ள செயல்பாட்டைக் குறித்த இரண்டு முக்கிய கருதுகோள்கள் உள்ளன. தோல் உயிரணுக்களின் வளர்ச்சியும் இனப்பெருக்கமும் அதிகரிப்பதன் கோளாறு காரணமாக காளாஞ்சகப்படை ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. இது முதல் கருதுகோளாகும். மேல்தோல் மற்றும் அதனுடைய மேல்தோல் அணுக்களின் பிழையாக இந்தப் பிரச்சனை காணப்படுகிறது. இரண்டாவது கருதுகோளில், தடுப்பாற்றல்-செயலூக்கியின் கோளாறாக இந்த நோய் இருக்கிறது என்று கருதுப்படுகிறது. இதில் தடுப்பாற்றல் அமைப்பினால் உண்டாகும் காரணி முதலாவதாகவும், தோல் உயிரணுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்தல் இரண்டாவது நிலையாகவும் கருதப்படுகிறது. T உயிரணுக்கள் (பொதுவாக நோய்த்தொற்றிலிருந்து உடலை பாதுகாக்க உதவும்) செயல்பட ஆரம்பித்து அடித்தோலுக்கு நகர்ந்து சைட்டோகைன்களை (குறிப்பாக கட்டியழியும் காரணி-ஆல்ஃபா TNFα) வெளியிடுவதற்கு தூண்டுகிறது. இதன் காரணத்தினால் அழற்சியும் தோல் உயிரணுக்களின் விரைவான உற்பத்தியும் ஏற்படுகிறது. T உயிரணுக்கள் எதனால் செயல்பட ஆரம்பிக்கிறது என்பது இன்னும் அறியப்படவில்லை.

தடுப்பாற்றலடக்கி மருந்துகளின் மூலமாக காளாஞ்சகப்படை சிவந்த தட்டை வடிவ திட்டுகள் (சொரியாஸிஸ் ப்ளேக்) குணப்படுத்தப்படலாம் என்ற கருத்தை காளாஞ்சகப்படையின் தடுப்பாற்றல்-செயலூக்கியின் மாதிரி ஆதரிக்கிறது. எனினும், தடுப்பாற்றல் அமைப்பின் பங்கு இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. T உயிரணுக்களின் குறைப்பாடு உள்ள எலிகளுக்கு காளாஞ்சகப்படையின் மிருக மாதிரி தூண்டப்படலாம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.[22] மிருக மாதிரிகள், மனித காளாஞ்சகப்படையின் ஒரு சில தன்மைகளுடன் மட்டுமே ஒத்திருக்கிறது.

எதிர்ப்பாற்றல் குறை தோல் தடை செயல்பாட்டிற்கு காளாஞ்சகப்படை ஏற்புத்திறனில் பங்கு வகிக்கிறது.[23]

காளாஞ்சகப்படை ஓர் இயல்புக்கு மாறான வினை சார்ந்த நோயாக உள்ளது. வெளிப்படையான காரணம் எதுவுமில்லாமல் நோய் அதிகமாகும் அல்லது குறையும் என்பது காளாஞ்சகப்படை உள்ள பெரும்பாலான மக்களின் அனுபவமாகும். தனிநபர்களின் சிறிய (வழக்கமாக மருத்துவமனையிலேயே செய்யப்படுதல்) மாதிரிகளை அடிப்படையாக கொண்டே காளாஞ்சகப்படை தொடர்பான காரணிகள் பற்றின ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகள் பிரதிநிதிகள் தொடர்பான விவகாரத்தாலும் மேலும் மற்ற காரணங்களிலிருந்து (இதுவரை தெரியாமலே இருக்க வாய்ப்புள்ள) இயல்பான காரணங்களை உணரக் கூடிய திறன் இல்லாத நிலையாலும் பாதிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. முரணான கண்டுபிடிப்புகள் அவ்வப்போது அறிக்கையிடப்பட்டனர். எனினும் உளைச்சல் (உடல் மற்றும் மன ரீதியாக), தோலில் காயம் ஏற்படுதல் மற்றும் ஸ்ட்ரெப்ட்டோக்காக்கஸ் சார்ந்த நோய்த் தொற்று ஆகியவை நேர்ந்த பிறகு திடீரென்று ஏற்படும் முதல் நோய் நிகழ்வு சிலநேரங்களில் அறிவிக்கப்படுகின்றன. நோய்த்தொற்றுகள், உளைச்சல் மற்றும் காலநிலையிலும் பருவக் காலத்திலும் உள்ள மாற்றங்கள் ஆகியவை இருக்கும் போது நோய் தீவிரமடைகிறது என்பது அறிவிக்கப்பட்டது. லித்திய உப்பு மற்றும் பீட்டா ப்ளோக்கர்கள் உட்பட சில மருந்துகளின் காரணங்களினாலும் நோய் தூண்டப்படுகிறது அல்லது தீவிரமடைகிறது என்று அறிவிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைத்தல் மற்றும் உடற் பருமன் ஆகியவை காளாஞ்சகப்படையை அதிகரிக்கலாம் அல்லது நோய்நிலையை கையாளுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.[24][25] முடியில் தெளிக்கப்படும் நீர்மம், சில முகத்தில் தடவும் க்ரீம்கள் மற்றும் கைகளில் தேய்க்கப்படும் திரவம் ஆகியவையின் காரணமாகக் கூட காளாஞ்சகப்படை திடீரென்று ஏற்படலாம்.

மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைப்பாட்டு வைரஸ் (ஹியூமன் இம்யூனோடிஃபிஷியன்ஸி வைரஸ்) அல்லது HIVயின் நோய் முற்றிய விளைவுகளால் அவதியுறும் தனிநபர்களுக்கு அடிக்கடி காளாஞ்சகப்படை உண்டாகும்.[26] T-உயிரணு எண்ணிக்கையை குறைக்கும் பாரம்பரிய சிகிச்சைமுறையினால் காளாஞ்சகப்படை உண்டாகலாம் என்ற முரண்பாடான கருத்தை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கச்செய்தது. HIV விருத்தியடையும் போது CD4-T-உயிரணுவின் எண்ணிக்கை குறைகிறது. அப்போது காளாஞ்சகப்படையும் அதிகமாகும்.[27] மேலும், உறுதியான Th2 சைட்டோகைன் புறவுருவின் மூலமாக HIV குறிப்பிடத்தக்க அளவில் அறியப்படுகிறது. ஆனால் சொரியாஸிஸ் வல்கேரிஸ், உறுதியான Th1 சுரத்தலின் மூலம் அறியப்படுகிறது.[28] CD4-T-உயிரணு குறைதலின் காரணமாக CD8-T-உயிரணுக்கள் அதிகமாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக HIV உள்ள நோயாளிகளுக்கு காளாஞ்சகப்படை அதிகமாகிறது என்று கருத்துரைக்கப்பட்டது. காளாஞ்சகப்படை உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆரோக்கியமாக உள்ளனர். காளாஞ்சகப்படை உள்ள HIV நோயாளிகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. HIV நோய்த்தொற்று உள்ளவர்களில் காளாஞ்சகப்படையின் தாக்கம் ஒன்று முதல் 6 சதவீதம் வரை உள்ளது. இது சாதரணமான மக்களுக்கு (HIV நோய்த்தொற்று இல்லாதவர்களுக்கு) ஏற்படும் நோய்த் தாக்கத்தைவிட 3 மடங்கு அதிகமானதாகும்.[29]

Thumb
காளாஞ்சகப்படை சிகிச்சை ஏணியின் திட்ட வடிவம்

எண்ணெய்ப் பசை அல்லது நன்கு ஈரப்பதமாக இருக்கும் தோலை விட வறண்ட தோல்களில் அதிகமாக காளாஞ்சகப்படை ஏற்படுகிறது. குறிப்பாக உராய்வு அல்லது வெட்டு போன்ற மேல் தோல் காயத்திற்கு பிறகு இந்த நோய் ஏற்படுகிறது. நோய்த்தொற்றின் காரணத்தினால் காளாஞ்சகப்படை ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. குறைவான தோல் எண்ணெய்ப் பசை இருக்கும் வரண்ட தோல்நிலைகளுக்கு அடியில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் உயிரிகள் அதிகமாக வாழும். ஆகையால் தோல் ஈரப்பசையுடன் இருந்ததானால் இந்த நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கப்படலாம். காளாஞ்சகப்படை பாதப்படை நோய்க்கு எதிர்த்தன்மை கொண்ட நோயாகும். பாதப்படை நோய் ஈரமான நிலைகளில் இருக்கும் தோலின் அடியில் உள்ள பூஞ்சை நோய்த்தொற்றின் காரணத்தினால் ஏற்படுகிறது. ஆனால் காளாஞ்சகப்படை, தோல் வறண்ட நிலையில் இருப்பதன் காரணத்தினால் ஏற்படுகிறது. இந்த நோய்த்தொற்று அழற்சியை தூண்டுகிறது. நமைச்சல் மற்றும் தோல் துரித மறுசுழற்சி ஆகிய காளாஞ்சகப்படையோடு பொதுவாக தொடர்புடைய அறிகுறிகளை இது ஏற்படுத்துகிறது. தோலுக்கு செல்லும் ஈரப்பதத்தை நோய்த்தொற்றும் உயிரிகள் உறிஞ்சிக்கொள்வதால் தோல் வறண்டுவிடுகிறது. தோல் வறட்சியடைவதைத் தடுத்து, காளாஞ்சகப்படை அறிகுறிகளைக் குறைப்பதற்கு, குளிக்கும் போது தோலில் தேய்க்கும் பஞ்சுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. குளிக்கும் போது பயன்படுத்தும் பஞ்சுகள் மிகச்சிறிய உராய்வுகளை ஏற்படுத்தி தோலை சேதப்படுத்துகிறது மற்றும் இயற்கையாகவே தோலில் இருக்கும் எண்ணெய் பசையை சுரண்டி எடுத்துவிடுகிறது. தோலைக் கழுவியவுடன் டால்க் பவுடரை பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படுகிறது. மிகுதியான ஈரப்பதத்தின் காரணத்தினால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். ஆகையால், டால்க் பவுடரை பயன்படுத்துவதனால் தோலில் அதிகமாக உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் தோலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் க்ரீம்களைத் தோலில் தடவலாம் மற்றும் தோல் எண்ணெய் சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தோலில் தடவும் திரவம் பயன்படுத்தப்படுகிறது.[மேற்கோள் தேவை]

சிகிச்சை

கடந்த பத்தாண்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள், பேஸ் III தரவு அல்லது முறையான அங்கீகாரத்துடன் "புதிய மற்றும் மிகுந்த பயனுள்ள இலக்கிடப்பட்ட சிகிச்சைமுறைகள்" உருவாவதற்கு வழிவகுத்தது. நோய்த் தடுப்பாற்றல் உயிரணுக்கள் போன்ற T உயிரணுக்கள் மற்றும் டெண்ட்ரோசைட்டுகள் எப்படி பயணம் செய்கின்றன மற்றும் அவை ஒன்றுக்கொன்று இடைவினைப் புரிவதற்கு வேதியல் குறிகளை (சைட்டோக்கைன்ஸ்) எப்படி பயன்படுத்துகின்றன என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். இரண்டு உத்திகளை மருந்துகள் பின்பற்றுகின்றன: T உயிரணுவை எதிர்க்கும் உத்திகள் மற்றும் ஆண்டிசைட்டோகைன் உத்திகள்.[19]

இஃபாலிஸுமாப் மற்றும் அலிஃபாசெப்ட் ஆகிய இரண்டு மருந்துகள் T உயிரணுக்களை இலக்காகக் கொள்கின்றன. இஃபாலிஸுமாப் (இது இப்போது விற்பனை செய்யப்படுவதில்லை) என்பது ஒரு செல் நோய் எதிரணுவாகும். இது டெண்ட்ரிடிக் உயிரணுக்கள் T உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் மூலக்கூறுகளைத் தடைசெய்கிறது. அகவணிக்கலங்களில் இரத்த குழல்களை வரிசைப்படுத்தும் ஒட்டும் பண்புடைய மூலக்கூறுகள் உள்ளன. இவை T உயிரணுக்களை கவரக்கூடியதாக உள்ளது. இந்த ஒட்டுப்பண்புடைய மூலக்கூறுகளையும் இது தடைசெய்கிறது. எனினும், அது பொதுவாக எந்த தீங்கையும் விளைவிக்காத வைரஸுகளைக் கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஆற்றலை மட்டுப்படுத்தியது. இதனால் மூளை தொற்றுகள் ஏற்பட்டன. T உயிரணுக்களுடன் டெண்ட்ரிடிக் உயிரணுக்கள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் மூலக்கூறுகளையும் அலீஃபாசெப்ட் தடைசெய்கிறது. இது அழற்சியைக் கட்டுப்படுத்துவதற்காக, இயல்பான கொல்லும் பண்புடைய உயிரணுக்கள் T உயிரணுக்களை அழிக்க வைக்கின்றன.[19]

உயிரணுக்களுக்கு இடையே அழற்சிக் குறிகளை அனுப்புவதற்கு பயன்படுத்தும் மூலக்கூறுகளான சைட்டோகைன்களை ஒரு செல் நோய் எதிரணுக்கள் (MABகள்) பல இலக்காக் கொள்கிறது. கட்டியழியும் காரணி α (TNF-α), உடலில் உள்ள முக்கியமான அழற்சி குறிகளில் ஒன்றாகும். மூன்று MABகளான இன்ஃப்லெக்சிமாப், அடலிமுமாப் மற்றும் இடானர்செப்ட் ஆகியவை TNF-αவுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இண்டர்லியூக்கின்-23 மற்றும் இண்டர்லியூக்கின்-12 ஆகியவை அழற்சி விளைவிக்கின்ற மற்ற இரண்டு குறிகளாகும். புரதச் சங்கிலி p40, அந்த இரண்டு இண்டர்லியூக்கின்களிலும் ஒரேமாதிரியாக தான் உள்ளது. அவை இரண்டுடனும் தலையிடுவதற்காக அந்த பொதுவான புரதத்துடன் ஒரு செல் நோய் எதிரணுவான யூஸ்டிகினுமாப் பிணைந்து கொள்கிறது.[19]

குறிப்பிட்ட காளாஞ்சகப்படை சிகிச்சைமுறைகளின் செயல்திறனில் ஒவ்வொரு தனிநபர்களுக்கிடையே அளவு வேறுபாடுகள் இருக்கலாம். இதன் காரணத்தினால் தோல் நிபுணர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற சிகிச்சை முறையை கண்டுபிடிப்பதற்காக அடிக்கடி சோதித்து பிழை களைதல் அணுகுமுறையை பயன்படுத்துகிறார்கள். காளாஞ்சகப்படையின் வகை, அழற்சியிருக்கும் இடம், நோயின் அளவு மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோயாளிகளுக்கு எந்த சிகிச்சை அளிக்கலாம் என முடிவு செய்வார்கள். நோயாளியின் வயது, பாலினம், வாழ்க்கைத் தரம், உடன்-உடல்நலக்குறைவுகள் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடைய ஆபத்துக் குறித்த மனப்பாங்கு ஆகியவையும் கூட கருத்திற்கொள்ளப்படுகின்றன.

2008 ஆம் ஆண்டில் காளாஞ்சகப்படை நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய மூன்று புதிய சிகிச்சைமுறை தெரிவுகளுக்கு[30] FDA ஒப்புதலளித்தது: 1) டாக்லோனெக்ஸ் ஸ்கால்ப் - உச்சந்தலை காளாஞ்சகப்படைக்கு சிகிச்சை கொடுப்பதற்கான ஒரு புதிய மேற்பூச்சு களிம்பு; 2) எக்ஸ்ட்ராக் திசைவேக எக்ஸைமர் லேசர் கருவி - இது புற ஊதா ஒளியின் மிகு-தீவிர ஒளிக்கதிரை வெளியிடுகிறது. இதன் மூலம் காளாஞ்சகப்படையின் மிதமானது முதல் கடுமையானது வரை உள்ள நோய்நிலைக்கு சிகிச்சையளிக்க முடியும்; மற்றும் 3) உயிரி சார்ந்த மருந்து அடாலிமுமாப் (வர்த்தகச் சின்னத்தின் பெயர் ஹியூமிரா), காளாஞ்சகப்படையில் மிதமானது முதல் கடுமையானது வரை உள்ள நோய்நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடாலிமுமாப் காளாஞ்சகப்படை சார்ந்த கீல்வாதத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

மிகவும் குறைவான ஆற்றலுள்ள எதிரிடை பின்விளைவுகளுள்ள மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சையின் குறிக்கோளை அடையமுடியவில்லையென்றால் மிகவும் அதிகமான ஆற்றலுள்ள நச்சுத்திறன் கொண்ட சிகிச்சைமுறைகள் பயன்படுத்தப்படலாம். பதிலளிக்காத கடுமையான காளாஞ்சகப்படைக்கென்றே குறிப்பிடத்தக்க நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் ஒதுக்கிவைக்கப்படுகிறது. இது காளாஞ்சகப்படை சிகிச்சை ஏணி என்று அழைக்கப்படுகிறது.[31] ஒரு முதற்படியாக, சிதரனால்-RR போன்ற மேற்பூச்சு சிகிச்சைகள் என்றழைக்கப்படும் மருத்துவ களிம்புகள் அல்லது கிரீம்கள் தோலில் பூசப்படுகின்றன. இது குறுகியகால தொடர்பு சிகிச்சைமுறைக்கு (5-15 நிமிடம்) துரித நிவாரணத்தை அளிக்கும் ஆன்தரலினை கொண்டுள்ளது. இதில் ஆன்தரலின் துருவக் கொழுப்புப்பொருட்களின் ஒரு நுண்பொதிமருந்தாக்கப்படுகிறது. மேற்பூச்சு சிகிச்சையில் விருப்பப்படுகிற குறிக்கோளை அடையமுடியாமல் சிகிச்சை தோல்வியுற்றதானால், அடுத்த படியாக புறஊதாக் (UV) கதிரில் தோல் காண்பிக்கப்படும். இந்த வகையான சிகிச்சை ஒளிசிகிச்சைமுறை என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது படி, மாத்திரைகள் அல்லது ஊசிகள் மூலமாக உள்ளெடுக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதாகும். இந்த அணுகுமுறை முறையான சிகிச்சைமுறை என்று அழைக்கப்படுகிறது.

காலப்போக்கில், காளாஞ்சகப்படை ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்கு தடுப்பாற்றல் கொண்டதாகிவிடுகிறது. தடுப்பாற்றல் உருவாவதைத் தடுப்பதற்காகவும் (டாக்கிஃபிலாக்ஸிஸ்) எதிரிடைப் பின்விளைவு நிகழும் வாய்ப்பை குறைப்பதற்காகவும் சிகிச்சைகள் காலமுறை தோறும் மாற்றப்படவேண்டும். இது சிகிச்சை சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

காளாஞ்சகப்படையின் வழக்கமான சிகிச்சையில், பொதுவாக நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகள் கொடுக்கப்படுவதில்லை. எனினும், ஒருசில வகை கட்டேட் காளாஞ்சகப்படையில் காணப்படுவது போல, ஸ்டிரெப்டோக்காக்கஸ் நுண்ணுயிரியால் உருவான ஒரு தொற்று, காளாஞ்சகப்படையை உண்டாகுமானால், நோய்க்கிருமி கட்டுப்படுத்திகள் பயன்படுத்தப்படலாம்.[மேற்கோள் தேவை]

அறிவுசார் நடத்தை சிகிச்சைமுறை

தடிப்புத்தோல் அழற்சியை கையாளுவதில் பாரம்பரிய சிகிச்சைமுறைகளுடன் ஒரு மனோதத்துவ அறிகுறி கையாளுதல் திட்டம் உதவியாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.[32]. UKவில் த சொரியாசிஸ் அண்ட் சொரியாடிக் அலையன்ஸ் (PAPAA) என்ற ஒரு தொண்டு நிறுவனம் யுனிவர்சிடி ஆஃப் மான்செஸ்டர் நடத்திய ஒரு ஆராய்ச்சிக்கு நிதியளித்தது. அந்த ஆராய்ச்சி மாற்றியமைக்கப்பட்ட அறிவுசார் நடத்தை சிகிச்சைமுறை அனுகுமுறையைப் பயன்படுத்தி காளாஞ்சகப்படைக்கான மின்னணுவியல் இலக்கிட்ட சிகிச்சைமுறை (எலக்ட்ரானிக் டார்கெடட் இண்டர்வென்ஷன் ஃபார் சொரியாசிஸ்) (eTIPகள்) என்ற ஒரு அறிகுறி கையாளுதல் திட்டத்தை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சி காளாஞ்சகப்படையுள்ளவர்களில் மன அழுத்தம், துன்பம் மற்றும் செயலிழப்பு ஆகியவற்றில் ஃபார்ச்சூன் டி ஜி மற்றும் மற்றவர்களால் [33] செய்யப்பட்ட ஆராய்ச்சியைப் பின்பற்றுகிறது.

மேற்பூச்சு சிகிச்சை

குளியலறை கரைசல்கள் மற்றும் தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்துபவை (மாய்ஸ்சுரைஸர்கள்), கனிம எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவை பாதிக்கப்பட்ட தோலை ஆற்றவும் தட்டைவடிவ காளாஞ்சகப்படையில் தோல் சேர்வதினால் உண்டாகும் வறட்சியைக் குறைக்கவும் உதவும். மருத்துவ கிரீம்கள் மற்றும் களிம்புகள் (ஆயிண்ட்மண்ட்) தட்டை வடிவ காளாஞ்சகப்படையில் நேரடியாக தடவப்படும்போது அவை அழற்சியைக் குறைக்கவும், மேல்படிந்த செதில்களை அகற்றவும், தோல் மறுசுழற்சியைக் குறைக்கவும், தட்டைவடிவ தோலழற்சியால் பாதிக்கப்பட்ட தோலை நீக்கவும் உதவலாம். நிலக்கரித்தார், டைத்ரனால் (ஆன்த்ரலின்), டெஸாக்ஸிமெடசான் (டாபிகோர்ட்), ஃப்ளூசினோனைட் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள், விடமின் டி3 ஒத்தப்பொருட்கள் (உதாரணத்திற்கு, கால்சிபாட்ரியால்) மற்றும் ரெடினாய்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள களிம்புகள் மற்றும் கிரீம்கள் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இதே போன்ற சில உறுதியான முடிவுகளுக்காக அர்கான் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.[34] இந்த ஒவ்வொன்றின் செயல்பாட்டின் இயங்குமுறையும் ஒருவேளை வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்துமே தோல் அணு உற்பத்தியை சீராக்கி அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. செயற்படுத்தப்பட்ட விட்டமின் டியும் அதன் ஒத்தப்பொருட்களும் தோல் அணு பெருக்கமடைதலைக் குறைப்பதில் மிகவும் திறனுள்ளவைகளாக உள்ளன.

பின்வருவன மேற்பூச்சு மருந்துகளின் குறைபாடுகளாகும்: அவை அடிக்கடி சாதாரண தோலுக்கு எரிச்சல் உண்டாக்குகின்றன, அவற்றை பூச சங்கடமாகவும் நேரமெடுப்பவைகளாகவும் இருக்கலாம், தொடர்ந்து பல நாட்களுக்கு பயன்படுத்தமுடியாது, துணியில் கறையை உண்டாக்கலாம் அல்லது அவற்றிலிருந்து நாற்றம் அதிகமாக வரலாம். இது போன்ற காரணங்களினால் சிலரால் இத்தகைய மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த முடிவதில்லை. கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற சில மேற்பூச்சு மருந்துகளை தீடிரென்று நிறுத்திவிட்டால் நோய்நிலை வீரியம் அதிகமாகி திரும்பவந்துவிடக்கூடும். இது நோய்நிலையின் மீளுயர்வு என்று அழைக்கப்படுகிறது.

சில மேற்பூச்சு மருந்துகள் மற்ற சிகிச்சைமுறைகள், குறிப்பாக ஒளிசிகிச்சை முறையுடன் (ஃபோடோதெரபி) சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன.

ஒளிசிகிச்சைமுறை (ஃபோடோதெரபி)

சில நோயாளிகள் தினமும் சிறிது நேரம் அதிகம் வெப்பமில்லாத சூரிய ஒளியில் உடலைக் காண்பிப்பதனால் காளாஞ்சகப்படை நீங்கலாம் அல்லது சுமாராகலாம் என்பது பல நாட்களாக தெரிந்த ஒரு விஷயமாகும். நீல்ஸ் ஃபின்சன் என்பவர்தான் முதன் முறையாக சூரியஒளியின் சிகிச்சையளிக்கக்கூடிய குணங்களை அறிவியற்பூர்வமாக ஆய்வு செய்த மருத்துவர் ஆவார். இவர் தான் சூரிய நிறமாலையின் (சோலார் ஸ்பெக்ட்ரம்) தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை சிகிச்சை வழக்கத்தில் கொண்டு வந்தார். இது பின்வந்த காலங்களில் ஒளிசிகிச்சைமுறை என்றழைக்கப்பட்டது.

சூரிய ஒளி பல வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பகுதியில், காளாஞ்சகப்படைக்கு சூரிய ஒளி கொண்டுள்ள சிகிச்சையளிக்கக் கூடிய குணம், புற ஊதா (UV) ஒளி என்று அழைக்கப்படும் அதன் அலைநீளங்களால் வருகிறதென்று அறியப்பட்டது.

புற ஊதா அலைநீளங்கள் UVA (380–315 நே.மீ) UVB (315–280 நே.மீ) மற்றும் UVC (< 280 நே.மீ) என்று பிரிக்கப்படுகிறது. புற ஊதா B (UVB) (315–280 நே.மீ) மேல் தோலினால் உட்கிரகிக்கப்பட்டு காளாஞ்சகப்படையில் ஒரு சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. இரண்டுவிதமான UVB விளக்குகள் இருக்கின்றன: ஒடுக்கப்பட்டை (311 to 312 நே.மீ) மற்றும் அகன்ற பட்டை (அகலப்பட்டை, அல்லது "FS" வகை) UVB (290-320 நே.மீ). UVB அகன்றப்பட்டை தோலை சிவக்க செய்வதால் குறுகிய நேரமே காட்டப்பட வேண்டும், ஆனால் UVB ஒடுக்கப்பட்டை 300 நேனோமீட்டர்களுக்குக் குறைவான நிறமாலையைக் கொண்டிராததால் தோல் சிவத்தல் இல்லாமல் அதிக நேரம் காட்டப்படலாம், ஆகையால் இது அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. UVB ஒடுக்கப்பட்டை விளக்குகள் பிலிஃப்ஸ் லைட்டிங்கால் உருவாக்கப்பட்டன. இதன் நோக்கம், அகன்றப்பட்டை விளக்குகளுடன் ஒப்பிடும்போது காளாஞ்சகப்படையின் செயல்படும் நிறமாலைக்குப் பொருந்துமாறு 311நே.மீட்டரில் துள்ளியமான வெளியீட்டு உச்சக்கட்டத்தை அடைந்து, அதிகரித்த செயற்திறனை அடைவதாகும்.[35] ஒரு வாரத்திற்கு பல முறைகளென்று, பல வாரங்கள் UVB இல் உடலைக் காண்பிப்பது, காளாஞ்சகப்படையிலிருந்து வெளியே வர மக்களுக்கு உதவலாம். சில நேரங்களில், பாதுகாப்பு பராமரிப்பிற்காக சிகிச்சைகள் வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நாட்பட்ட நோய் திரும்பி வந்துவிடும்.

மருத்துவமனைகளில், புற ஊதா சிகிச்சை அவ்வப்போது மேற்பூச்சு (நிலக்கரித்தார், கால்சிபாட்ரியால்) அல்லது மண்டலிய சிகிச்சையுடன் (ரெடினாய்டுகள்) சேர்க்கப்படுகிறது. இதனுடைய சேர்க்கையில் (இணைவுப் பொருத்தத்தில்) ஓர் இணைவிணை உள்ளது. இன்கிராம் மருந்துக்கூட்டில் UVB யுடன் ஆன்தரலின் பேஸ்ட் தடவுதலும் பரிந்துரைக்கப்படுகிறது. கோய்க்கர்மன் மருந்துக்கூட்டு நிலக்கரித் தார் களிம்புடன் UVB ஐ சேர்த்து வழங்குகிறது. நிலக்கரித்தார் புற்றுநோயுண்டாக்கக் கூடிய அறியப்படாத உட்பொருட்களைக் கொண்டிருக்கிறது. இது அதிக நேரம் எடுக்கும் சிகிச்சையாக இருப்பதால், நிலக்கரித்தாரின் பயன்பாடு அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை.

ஒளிவேதியியல் சிகிச்சைமுறை

சோராலென் மற்றும் புற ஊதா A ஒளிசிகிச்சைமுறையில் (PUVA), சோலரென் வாய்வழியாக அல்லது மேற்பூச்சாக அளிக்கப்படுகிறது மற்றும் புற ஊதா A (UVA) ஒளியும் காட்டப்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறதென்று துள்ளியமாக இதுவரையும் தெரியவில்லை. இது செயல்படும் முறை ஒருவேளை பின்வரும் முறையின் மூலம் இருக்கலாம்: UVA ஒளி சோராலென்னின் செயல்பாட்டை முடுக்கி விடுகிறது, சோராலென் காளாஞ்சகப்படைத் தோலில் அதிவேகமாக உற்பத்தியாகும் அணுக்களின் உற்பத்தியைத் தடுக்கிறது. தோல் நோயெதிர்ப்பு அமைப்பில் உண்டாக்கும் விளைவுகள் உட்பட, PUVA வுடன் பல செயல்பாட்டு முறைகள் சம்பந்தப்படுகின்றன.

PUVA குமட்டல், தலைவலி, உடற்சோர்வு, எரிச்சல் மற்றும் நமைச்சலுண்டாக்குவதாக கருதப்படுகிறது. தொடர்ந்து பல நாட்களாக இதைக் கொண்டு சிகிச்சையளித்தால் செதிள் அணு புற்று (கரும்புற்று இல்லை) வருவதாக கருதப்படுகிறது.

மண்டலிய (ஸிஸ்டமிக்) சிகிச்சை

Thumb
தொடக்க நிலையில் காளாஞ்சகப்படையுடன் (மற்றும் காளாஞ்சகப்படை சார்ந்த கீல்வாதம்) இருக்கும் நோயாளியின் படங்கள் மற்றும் அந்த நோயாளி இன்ஃப்லிக்ஸிமாப் சிகிச்சையை ஆரம்பித்த 8 வாரங்களுக்கு பிறகு உள்ள படங்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.

மேற்பூச்சு (டாப்பிகல்) சிகிச்சை மற்றும் ஒளிசிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காளாஞ்சகப்படை ஆகியவை மாத்திரை அல்லது மருந்தூசி மூலமாக உடம்புக்குள் அனுப்பப்படும் மருத்துவங்களால் சிகிச்சையளிக்கப்படுகிறது. இது மண்டலிய சிகிச்சை என்றழைக்கப்படுகிறது மருத்துவத்தின் நச்சுத்தன்மையினால் மண்டலிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் முறையாகத் தொடர்ந்து இரத்தம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டு சோதனைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இது போன்ற பெரும்பாலான சிகிச்சைகளில் கருவுறுதல் தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலானோர் மண்டலிய சிகிச்சையை கைவிட்டதும் காளாஞ்சகப்படை திரும்ப வரும் அனுபவம் பெற்றுள்ளனர்.

மெதொடிரெக்ஸேட், சைக்ளோஸ்போரின் மற்றும் ரெடினாய்டுகள் ஆகியவை வழக்கமாக அளிக்கப்பட்டுவரும் முக்கியமான மண்டலிய சிகிச்சைகளாகும். மெதொடிரெக்ஸே மற்றும் சைக்ளோஸ்போரின் தடுப்பாற்றலடக்கும் மருந்துகளாகும். ரெட்டினாய்டுகள் விட்டமின் Aவின் செயற்கை வடிவாகும்.

காளாஞ்சகப்படைக்கான குறிப்பிட்ட அங்கிகரிக்கப்படாத மற்ற கூடுதல் மருந்துகள் பயனுள்ளதாக இருக்கின்றன. இவற்றுள் வளர்சிதை மாற்ற எதிர்ப்பியான டையோகுவானின், செல்நச்சிய ஊக்கியான ஹைட்ராக்ஸியூரியா, சல்ஃபசாலசைன், தடுப்பாற்றடக்கிகள் மைக்கோஃபெனோலேட் மஃபிடால், அசதியாபிரின் மற்றும் வாய்வழி டாக்ரோலிமஸ் ஆகியவை அடங்கும். மற்ற சிகிச்சைகள் பயன் தராத போது காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிக்க இவையனைத்தும் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற பல நாடுகளில் அங்கிகரிக்கப்படவில்லை என்றாலும் கடுமையான காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிக்க ஜெர்மனியில் 20 வருடங்களுக்கு மேலாக ஃபூமரிக் அமில எஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறன.

பையாலஜிக்ஸ் என்பவை காளாஞ்சகப்படையில் ஈடுபடுகிற தடுப்பாற்று முறையை தடை செய்யும் உற்பத்தி செய்யப்பட்ட புரதங்களாகும். மெதொடிரெக்ஸேட் போன்ற பொதுப்படையான தடுப்பாற்றலடக்கு சிகிச்சைமுறைகளைப் போலல்லாமல் பையாலஜிக்ஸ் காளாஞ்சகப்படையை உண்டாக்குகின்ற தடுப்பாற்று இயக்கத்தின் குறிப்பிட்ட அம்சங்களை குறிவைக்கின்றன. இந்த மருந்துகள் (இண்டர்லூகின் எதிர்மருந்துகள்) ஒப்பிட்டுப் பார்க்கும்போது புதியவைகள் தான். தடுப்பாற்று இயக்கத்தின் மேல் அவைகளுடைய நெடுங்கால தாக்கம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் காளாஞ்சகப்படை மற்றும் தடிப்புத் தோலழற்சி கீல்வாதத்துக்கு சிகிச்சையளிப்பதில் திறனுள்ளவைகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அமவீவ், என்ப்ரல், ஹ்யுமிரா, ரெமிகேட் மற்றும் ராப்டிவா ஆகியவை அடங்கும். ராப்டிவா அதை உண்டாக்கியவரால் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் US சந்தையிலிருந்து திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. பையாலஜிக்ஸ் பொதுவாக சுய-மருந்தூசியாக அல்லது மருத்துவருடைய அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது. அவை மிகவும் விலையுயர்ந்தவைகளாக உள்ளது மற்றும் கடுமையான காளாஞ்சகப்படையுள்ள வெகு சிலருக்கே பொருந்தக்கூடியதாக உள்ளது. உஸ்டெகினுமாப் (IL-12 மற்றும் IL-23 தடுப்பி) காளாஞ்சகப்படை சிகிச்சைமுறையில் நம்பகமான முடிவுகளைக் காண்பிக்கிறது.

பிரித்தானிய அசோசியேஷன் ஆஃப் டெர்மடாலஜிஸ்ட்ஸ் (BAD), இங்கிலாந்தில் 2005 ஆம் ஆண்டில் காளாஞ்சகப்படையில் உயிரியல் சார்ந்த சிகிச்சைமுறைகளின் பயன்பாட்டிற்கான வழிமுறைகளை வெளியிட்டனர். [36].BAD உயிரியல் சார்ந்த பதிவேடு (BADBIR) என்றழைக்கப்படும் ஒரு UK தேசிய பதிவேடு, பக்க விளைவுகள் மற்றும் பலன்களைக் குறித்து முக்கியமான தகவலை சேகரிக்க நிறுவப்பட்டுள்ளது. இது உயிரியல் சார்ந்த ஊக்கிகளாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது போன்ற மருந்துகளை எப்படி சிறப்பாக பயன்படுத்துவதென்றும் மருத்துவர்களுக்கு தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மாற்று சிகிச்சைமுறை

ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்வதன் மூலமாக சில நோய்கள் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படலாமென்ற கருத்தினால் சூழல்சிகிச்சைமுறை பயன்படுத்துகிறது. இந்த கருத்தின் அடிப்படையில் பல்வேறு தடிப்புத் தோலழற்சி சிகிச்சைமையங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. சாக் கடல் (டெட் ஸீ), இது போன்ற சிகிச்சைக்கு மிகவும் பேர்போன ஒரு இடமாக உள்ளது.

மற்றொரு சிகிச்சை மீன்சிகிச்சைமுறையாகும் (இக்தையோதெரபி) ஆகும். இது துருக்கி, குரோயேஷியா (ஆல்டர்மெடிகா) மற்றும் அயர்லாந்தில் சில சிகிச்சை வாழிடங்களில் உபயோகிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைமுறையில் டாக்டர் மீன்கள் (டாக்டர் ஃபிஷ்), காளாஞ்சகப்படையுள்ளவர்களின் தடிப்புத் தோலை உண்ணும்படி ஊக்குவிக்கப்படுகின்றன. வெளிப்புற நீர்சேர்மங்களில் வாழும் இந்த மீன்கள், தோலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே உண்கின்றன. மருந்து நீரூற்றின் வெளிப்புற அமைவிடம், சாதகமானப் பயன்களைத் தரலாம். இந்த சிகிச்சை, அறிகுறிகளிலிருந்து தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம். ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை சிகிச்சை வாழிடங்களுக்கு போய்வருதல் அவசியமாக உள்ளது. இந்த வெப்பநீரூற்றில் செய்யப்படும் சிகிச்சை, இரண்டு சிறிய மருத்துவ சோதனைகளில் பரிசோதிக்கப்பட்டன. அதில் சாதகமான முடிவுகள் கண்டெடுக்கப்பட்டன.[37][38]

ஆரிகான் கிரேப் (மஹோனியா அக்விஃபோலியம்), படைநோய் மற்றும் காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக உள்ளது என்று கூறப்படுகிறது.[39][40][41]

வரலாறு சார்ந்த சிகிச்சைமுறை

காளாஞ்சகப்படையின் வரலாறு முழுவதும் நச்சுத் தன்மையுள்ள சிகிச்சைமுறைகளால் நிறைந்திருக்கிறது. அவைகளின் செயல்திறனும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்திருக்கிறது. இந்த சிகிச்சைகள் குறிப்பிட்ட காலகட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்தன அல்லது குறிப்பிட்ட இடங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணத்திற்கு பண்டைய எகிப்து நாட்டில், பூனையின் மலத்தை தோலின் சிவந்த நைவுப் புண்களில் தடவுதல், மிகவும் பழமை வாய்ந்த மேற்பூச்சு சிகிச்சைகளில் ஒன்றாக இருந்தது. வெங்காயங்கள், கடல் உப்பு மற்றும் சிறுநீர், வாத்து எண்ணெய் மற்றும் விந்துநீர், காட்டத்தி பாலில் குளவிப்பிழுக்கைகள் மற்றும் விரியன் பாம்புகளிலிருந்து செய்யப்பட்ட சூப் (ரசம்) ஆகிய அனைத்தும் பண்டைய சிகிச்சைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் சமீபத்தில் 18வது மற்றும் 19வது நூற்றாண்டுகளில் தோலியல் நிபுணர்கள் தடிப்புத் தோலழற்சியின் சிகிச்சைக்காக நச்சுத்தன்மை மற்றும் புற்றுண்டாக்கக்கூடிய ஒரு ஆர்சனிக் சேர்மத்தைக் கொண்ட ஃபௌலர்ஸின் கலவையைப் பயன்படுத்தினார்கள். 20ம் நூற்றாண்டின் இடையில், (அதிமென்மையான எக்ஸ்-கதிர்கள் அல்லது பக்கி கதிர்கள் என்றும் அழைக்கப்படுகின்ற) கிரென்ஸ் கதிர்கள் தடிப்புத் தோலழற்சிக்கு மிகவும் பிரபலமான சிகிச்சையாக இருந்தது. இந்த வகை சிகிச்சை முறை புறஊதா சிகிச்சைமுறையால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

40 வருடங்களுக்கு முன்பாக அண்டிசிலினிக் அமிலம் ஆய்வு செய்யப்பட்டு காளாஞ்சகப்படைக்காக பயன்படுத்தப்பட்டது.(தோராயம. 1950~).[42]

இந்த அனைத்து சிகிச்சைகளும் பயனிழந்து போய்விட்டன.

விக்டோரியன் மற்றும் எட்வர்டியன் காலங்களில் காளாஞ்சகப்படை சிகிச்சைக்கு கந்தகம் மிகவும் உயர்வாக எண்ணப்பட்டது. அது தற்போது ஸ்டீராய்டுகள் மற்றும் நிலக்கரித் தாருக்கு பாதுகாப்பான மாற்று முறையாக நம்பகத்தன்மையை திரும்பவும் பெற்றுள்ளன.[மேற்கோள் தேவை]

எதிர்கால மருந்து உருவாக்கம்

வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட காரணிகள் பரிசோதனை வாயிலாக அல்லது சில நேரங்களில் தற்செயலாகவும் கண்டுபிடிக்கப்பட்டன. மாறாக தற்போதைய புதிய சிகிச்சைக் காரணிகள் காளாஞ்சகப்படையில் ஈடுபடுகின்ற நோயெதிர்ப்பு செயல்முறைகளை இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டு மூலக்கூறு கடத்திகளைக் குறிப்பிட்டு குறிவைப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. T அணுக்கள் மற்றும் TNF தணிப்பிகளை குறிவைக்கும் உயிரியல் பொருட்களின் உபயோகத்தில் இத்தகைய உதாரணங்களை பார்க்கமுடியும்.

கானபினாய்டுகளின் தடுப்பாற்றலடக்கு குணங்களாலும் நோயெதிரிப்பு அமைப்பில் THCயின் கட்டுப்படுத்தும் விளைவுகளினாலும் காளாஞ்சகப்படைக்கு கஞ்சா (கானபீஸ்) சிகிச்சையளிக்கலாமென்று கூறப்படுகிறது.[43] மேல் தோல் அணுக்களின் பெருக்கத்தை தணிக்க இன்னும் குறிப்பான கானபினாய்டு ஏற்பி மருத்துவங்களைப்[44] பயன்படுத்தி கஞ்சாவின் விரும்பப்படாத விளைவுகள் மேற்கொள்ளப்படலாம்.[45]

தடுப்பாற்று கடத்திகளை குறிவைப்பதில் இன்னும் நுண்ணிய அளவில் வேலை செய்கின்ற கூடுதல் மருந்துகளை உருவாக்குவதில் எதிர்கால கண்டுபிடிப்புகள் முனைய வேண்டும்.[46]

ஆண்டிசென்ஸ் ஆலிகோநியூக்ளியோடைட்ஸில் செய்யப்படும் ஆராய்ச்சி காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிக்க புதிய வழிமுறைகளை அளிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கிறது.[47]

காளாஞ்சகப்படை உட்பட பல தன்தடுப்பாற்று நோய்களின் சிகிச்சைக்காக ஆபோட் லாபரேட்டரீஸுடன் கூட்டாக சேர்ந்து கேம்பிரிட்ஜ் ஆண்டிபாடி டெக்னாலஜி ABT-874 என்ற ஒரு மனித ஆண்டி-IL-12 ஒற்றையணு பிறப்பொருளெதிரியை உருவாக்கி வருகிறது. பேஸ் 2 சோதனைகள் முடிந்திருக்கிறது, சாதகமான முடிவுகள் வெளிவந்துள்ளன.[48] 2007ல் ஆபோட் பேஸ் III சோதனைகளை துவக்க இருந்தது.[49]

2004 ஆம் ஆண்டில் டாஸ் மற்றும் அவ்சி [50], இரண்டு ஆரம்பக்கட்ட கருத்துச்சான்று ஆய்வுகளில் சைக்ளோபமைனின் காளாஞ்சகப்படை மற்றும் அடிசெல் புற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்பதை நிரூபித்துக் காண்பிக்கப்பட்டது. 7 நோயாளிகளில் 31 தடிப்புத் தோல் நைவுப்புண்களுக்கு சிகிச்சையளித்து, இந்த ஆசிரியர்கள் மேற்பூச்சு ஸ்டீராய்டு கிளோபிடசால்-17 பிரபியோனேட்டை விட மேற்பூச்சு சைக்ளோபமைன், கட்டேட் மற்றும் பிளேக் காளாஞ்சகப்படையின் நோய்சார்ந்த மற்றும் இழயலியவியல் குணமாகுதலில் அதிக பயனுள்ளதாக உள்ளது என்பது சாதிக்கப்பட்டது. மேலும் சைக்ளோபமைன் மற்றும் கிளோபிடசால்-17 சேர்ந்து ஒரே நேரத்தில் தடவப்படும்போது குறிப்பிட்ட நைவுப்புண்களில், குணமாகுதல் மற்றும் நோய் பின்னடைதல் அதிவேகமாக நடைபெற்றதையும் சைக்ளோபமைன் மட்டும் அளிப்பதை விட 48 மணி நேரங்கள் முன்பு நோய்த் தெளிவு கிடைப்பதும் நிரூபித்துக் காண்பிக்கப்பட்டது.சைக்ளோபமைன் சீதப்படல அணுக்களின் வழக்கத்திற்கு அதிகமான அபிவிருத்தியை கட்டுப்படுத்துவதாகவும், அணுக்கரு அகற்றுதலை தூண்டுகிறது. CD41 நிணநீர்க்கலங்கள் உட்பட அழற்சியுண்டாக்கும் அணுக்களின் குறைபாடுடன் தொடர்பிருக்கிறதென்றும் சாதித்தனர்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஜூங்க்-ஹூன் லீ அவர்களின் தலைமையில் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் சூடோசெரமைட்ஸ் என்றழைக்கப்படும் செயற்கைக் கொழுப்புப் பொருட்களை உண்டாக்கினர். இவை தோல் அணு வளர்ச்சியில் ஈடுபட்டு ஒவ்வாமை தோலழற்சி, காளாஞ்சகப்படை மற்றும் குளூக்கோக்கார்டிகாய்டு (சிறுநீரக முனைச் சுரப்பி இயக்கு நீர்ப்பொருள்) - உந்தப்பட்ட மேல்தோலுக்குரிய நலிவு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம். ஒவ்வாமை தோலழற்சி என்பது சிவப்பு, செதில் போன்ற மிகவும் நமைச்சலெடுக்கும் தோல் உண்டாகும் படைநோயின் ஒரு வடிவமாகும்; குளுக்கோகார்டிகாய்டு-உந்தப்பட்ட மேல் தோலுக்குரிய நலிவில் தோலானது தோலணுக்களின் இழப்பினால் சுருங்கி விடுகிறது.[51]

2008 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி டாய்யோன், தாய்வானின் சாங்க் குங்க் நினைவு மருத்துவமனை மற்றும் சாங்க் குங்க் பல்கலை கழகத்தை சேர்ந்த யின் - கு லின்னின் தலைமையில் விஞ்ஞானிகள் சீன மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் இண்டிகோ நேச்சுரலிஸ் (கிங் டாய், 青黛), என்ற ஒரு கருநீல செடி, காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிப்பதில் திறனுள்ளதாக தோன்றுகிறதென்று ராய்ட்டர்ஸுக்கு தொலைபேசி மூலம் கூறினர். ஆர்கைவ்ஸ் ஆஃப் டெர்மடாலிஜியில் அன்மையில் வெளிவந்த பதிப்பில், அவர்கள், “இண்டிகோ நேச்சுரலிஸ் களிம்பு-சிகிச்சையளிக்கப்பட்ட நைவுப்புண்கள் 81 சதவீத மேம்பாட்டை காண்பித்தது, (மருந்து சேர்க்கப்படாத) களிம்பு-சிகிச்சையளிக்கப்பட்ட நைவுப் புண்கள் 26 சதவீத மேம்பாட்டை காண்பித்தது” என்று எழுதினர்.[52]

ரெடினாயிக் அமிலத்தின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி டாலரசோல் அதன் விளைவுகளை அதிகரிக்கிறது. As of February 2009, அதன் நோய்சார்ந்த சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.[53]

நோய் முன்கணிப்பு

காளாஞ்சகப்படை வாழ்க்கை முழுவதும் இருக்கும் ஒரு நோய் நிலையாகும்.[54] தற்போதைக்கு இதற்கு எந்த மருந்தும் இல்லை. ஆனால் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. தோல் புற்று, நிணநீர்த் திசுக்கட்டி மற்றும் கல்லீரல் நோய் உட்பட குறிப்பிடத்தக்க அளவுக்கு உடல்நலக்குறைவை உண்டாக்கக் கூடிய அதிகரித்த ஆபத்தைக் கொண்டுள்ள கடுமையான காளாஞ்சகப்படைக்கு சிகிச்சையளிக்க மிகவும் திறனுள்ள ஊக்கிகள் பல பயன்படுத்தப்படுகிறது. எனினும் காளாஞ்சகப்படை உள்ளவர்களில் பெரும்பாலானோர் முழங்கைகள் மற்றும் முட்டிகளில் சிறிய ஓரிட தோல்திட்டுகளையே கொண்டுள்ளனர். இது மேற்பூச்சு மருந்து மருத்துவம் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். காளாஞ்சகப்படை காலப்போக்கில் மோசமடையலாம். ஆனால் யார் மிகவும் பரவலான காளாஞ்சகப்படையைத் தோற்றுவிப்பர்கள் யாருக்கு நோய் மறைந்துவிடக்கூடிய சாத்தியமுள்ளதென்று ஊகிக்க முடியாது. ஒவ்வொரு தனிநபர்களும் தங்களுடைய வாழ்க்கை முழுவதும் அடிக்கடி திடீர் வெளிப்பாடு மற்றும் நோய் மீண்டு வருவதை அனுபவிப்பார்கள். அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை கட்டுப்படுத்த பொதுவாக வாழ்நாள் முழுவதும் சிகிச்சைமுறைகள் தேவைப்படுகின்றன.

ஒரு ஆய்வின்படி[55] காளாஞ்சகப்படை ஆண்களிலும் பெண்களிலும் கருங்கட்டியல்லாத தோல் புற்று வருவதற்கான ஆபத்தை இரண்டறை மடங்கு அதிகரிப்பதாக கூறுகிறது. ஆனால் புற்றுநோயின் எந்த குறிப்பிட்ட திசுவியல் துணைவகையும் மேலோங்கி நிற்கவில்லை. இந்த அதிகரித்த ஆபத்து காளாஞ்சகப்படை நோயெதிர்ப்பு மருந்துகளுடன் தொடர்புப்படுத்தப்படலாம்.


"த ஹார்ட்பிரேக் ஆஃப் சொரியாஸிஸ்"

“த ஹார்ட்பிரேக் ஆஃப் சொரியாஸிஸ்” என்ற சொற்றொடர் அடிக்கடி அர்த்தத்துடனும் கிண்டலாகவும், இந்த நோயின் உணர்வுப்பூர்வ தாக்கத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது நாட்பட்ட அசௌகரியமான ஒரு கோளாறின் விளைவுகளையும் தன்னுடைய தோற்றத்தைக் குறித்து தன்னிலை உணர்ந்தவராகவும் (கவலையுற்றவராக) காணப்படும் விளைவுகளையும் உட்படுத்தலாம். இந்த சொல் மேல்பூச்சு மற்றும் மற்ற சிகிச்சைகளுக்கான பல்வேறு விளம்பரங்களில் காணப்பட முடியும். மற்றொரு வகையில் இது விளம்பரதாரர்கள் ஒரு நோயின் அம்சங்களை மிகைப்படுத்திக் (போலியாக கூட) கூறும் மனப்பான்மையை கேலி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு பல உற்பத்திப் பொருட்கள் தங்களுடைய விளம்பரங்களில் இந்த சொற்றொடரை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது முதல் முறையாக ஒரு நிலக்கரித்தார்-அடிப்படையில் உருவாக்கப்பட்ட களிம்பான டெக்ரின்னின் விளம்பர பிரச்சாரத்துக்காக 1960களில் முதன் முதல் தோன்றியது.

குறிப்புகள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.