டத்தோ
From Wikipedia, the free encyclopedia
டத்தோ என்பது (மலாய்:Datuk), மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 'பாங்லிமா ஜாசா நெகாரா' எனும் Panglima Jasa Negara (PJN)[1] விருதையும் 'பாங்லிமா செத்தியா டிராஜா' எனும் Panglima Setia Diraja (PSD) விருதையும், டத்தோ விருது என்று அழைக்கிறார்கள். 1965 ஆம் ஆண்டில் இருந்து பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கப்படுவதிலும் சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் உள்ளன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 200 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும்.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/d/dc/Panglima_Jasa_Negara.gif/120px-Panglima_Jasa_Negara.gif)
மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் 'பாங்லிமா ஜாசா நெகாரா' விருது 9ஆவது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா டிராஜா' விருது 10ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன.
டத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை டத்தின் (Datin) என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை டத்தின் பாதுக்கா (Datin Paduka) என்று அழைக்க வேண்டும். மலேசியப் பேரரசரைத் தவிர மலேசிய மாநிலங்களின் சுல்தான்களும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்கும் தகுதிகளைப் பெற்று உள்ளனர். மலேசியர்கள் மட்டுமே பெறக் கூடிய இந்த விருதை வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காகப் பெற்றுள்ளனர்.