ஜோத்பூர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
ஜோத்பூர் சமஸ்தானம் அல்லது மார்வார் இராச்சியம் (Jodhpur State), தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கில் அமைந்த மார்வார் பிரதேசத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டது. இதன் தலைநகரம் ஜோத்பூர் நகரம் ஆகும். மார்வார் எனும் ஜோத்பூர் இராச்சியத்தை 1226-இல் நிறுவியவர். இராவ் சிகா ஆவார்.
ஜோத்பூர் சமஸ்தானம் (1818–1947) மார்வார் இராச்சியம் (1226–1581; 1583–1818) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1226–1581 பொ.ச 1583–1947 பொ.ச | |||||||||
நிலை |
| ||||||||
தலைநகரம் | சோத்பூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | மார்வாரி இந்தி | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
மகாராஜா | |||||||||
• 1226–1273 பொ.ச. | இராவ் சிகா (முதல்) | ||||||||
• 1947–1949 பொ.ச. | ஹன்வந்த் சிங் | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1226–1581 பொ.ச 1583–1947 பொ.ச | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ராஜஸ்தான், இந்தியா |
ஜோத்பூர் சமஸ்தானம் கிபி 1226 முதல் 1818 வரை சுதந்திர முடியாட்சியுடனும்; 818 முதல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் படி பிரித்தானியர்களுக்கு அடங்கி, கப்பம் செலுத்தும் சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பிரித்தானிய இந்தியாவின் அரசு,, ஜோத்பூர் மன்னருக்கு 17 குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்
15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 6 ஏப்ரல் 1949 இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1931-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ப்டி, ஜோத்பூர் இராச்சியத்தின் பரப்பளவு 93,424 சதுர மைல் மற்றும் மக்கள் தொகை 21,25,000 ஆகும்.