ஜெயபாலன்
From Wikipedia, the free encyclopedia
ஜெயபாலன் (Jayapala), (964–1001) பஞ்சாபின் அந்தண ஜஞ்சுவா குலத்தைச் சேர்ந்த காபூல் சாகி வம்ச ஆட்சியாளர் ஆவார். இவரது ஆட்சியில் தற்கால ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணம் முதல் காஷ்மீர் வரையும் மற்றும் பாகிஸ்தானின் சிர்இந்த்-பதேகர் முதல் முல்தான் வரை இருந்தது. பெசாவர் இவற்றின் மையத்தில் இருந்தது.[1]
விரைவான உண்மைகள் ஜெயபாலன், குழந்தைகளின் பெயர்கள் ...
ஜெயபாலன் | |
---|---|
கடும் பனிப்பொழிவில் சிக்கிய ஜெயபாலனின் படைகள் | |
குழந்தைகளின் பெயர்கள் | அனந்தபாலன் |
தந்தை | உத்பாலன் |
மூடு
இவர் உத்பாலனின் மகனும், அனந்தபாலனின் தந்தையும் ஆவார்.[1]பரமார பட்டாரக மகாராஜாதிராஜா ஸ்ரீ ஜெயபாலதேவன் என்ற இவரது பட்டப் பெயர் பரித்கோட் கல்வெட்டுக் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[2]