ஜம்சேத்ஜீ டாட்டா
இந்திய தொழிலதிபர், டாடா குழுமத்தின் நிறுவனர் (பிறப்பு 1839) / From Wikipedia, the free encyclopedia
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (Jamshedji Nusserwanji Tata) (மார்ச் 3, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார்.[1] இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே இவரது பெயர் சூட்டப்பட்டது. உலகின் பெரும் நன்கொடையாளர்கள் பட்டியலில் ஜாம்சேட் ஜி டாடா முதலிடம் பெற்றுள்ளார்.[2]
விரைவான உண்மைகள் ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டாJamsetji Nasarwanji Tata, பிறப்பு ...
ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா Jamsetji Nasarwanji Tata | |
---|---|
![]() ஜம்சேத்ஜீ டாட்டா | |
பிறப்பு | (1839-03-03)3 மார்ச்சு 1839 நவ்சாரி, பரோடா (தற்போதைய குசராத்து) |
இறப்பு | 19 மே 1904(1904-05-19) (அகவை 65) ஜெர்மன் பேரரசு |
இனம் | குசராத்தி மக்கள்; பார்சி மக்கள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
பணி | நிறுவனர், டாட்டா குழுமம் |
சமயம் | சரத்துஸ்திர சமயம் |
பெற்றோர் | நுஸ்சீர்வஞ்ச் டாடா - ஜீவன்பாய் |
வாழ்க்கைத் துணை | ஹிராபாய் தபு |
மூடு