சௌத்திராந்திகம்
From Wikipedia, the free encyclopedia
சௌத்திராந்திகம் ஈனயான பௌத்த சமயத்திலிருந்து பிரிந்த இரண்டு முதன்மைப் பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று வைபாடிகம் ஆகும். இப்பிரிவை உருவாக்கியவர் குமாரலப்தர் ஆவார். குமாரலப்தர் நாகார்ஜுனர் காலத்தவர். பிடக சூத்திரத்தைப் பின்பற்றியதால் சௌத்திராந்திகர் எனப்பெயர் பெற்றனர். புலால் உண்ண தலைப்பட்ட பௌத்தப் பிரிவினர் சௌத்திராந்திகர்கள் என்பதை சிவஞான சித்தியாரின் பரபக்கத்தாலும் அறியலாம்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |