சோழர் கடற்படை
From Wikipedia, the free encyclopedia
சோழர் கடற்படை என்பது சோழப் பேரரசின் உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது இலங்கை, சிறீவிஜயம் (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், பொ.ஊ. 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினைத் தென்கிழக்காசியா தடுப்பதிலும் சோழர் கடற்படை முக்கியப் பங்காற்றியது.
சோழர் கடற்படை | |
---|---|
உருவாக்கம் | பொ.ஊ. 3ம் நூற்றாண்டு |
நாடு | சோழர் பேரரசு |
பற்றிணைப்பு | சோழர் பேரரசு |
கிளை | கடற்படை |
வகை | கடற்படை |
அளவு | உச்ச காலத்தில் 600-1000 கப்பல்கள். |
பகுதி | சோழர் படை |
சண்டைகள் |
|
தளபதிகள் | |
சக்கரவர்த்தி | அதிகாரமிக்க கட்டளைத் தளபதி |
குறிப்பிடத்தக்க தளபதிகள் |
இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழக் கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்குப் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் அரசதந்திரிகளாகவும் செயற்பட்டனர். பொ.ஊ. 900 முதல் பொ.ஊ. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளிலிருந்து ஆசியா முழுவதற்கும் அரசதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. ஆனால், தென்னிந்தியாவின் ஆந்திர-கருநாடகத் தலைமை நிலப்பகுதிகளில் இடம்பெற்ற சாளுக்கியர்களை வென்றடக்குவதற்கான சண்டைகளினால் படிப்படியாக மேலாதிக்கத்தைச் சோழர் இழந்தனர்.[1]