சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு
From Wikipedia, the free encyclopedia
சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு (Sandy Hook Elementary School Shooting) என்பது 2012, திசம்பர் 14ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க நாட்டின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரில் அமைந்துள்ள சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் 20 பள்ளிச் சிறார்களும் 6 பள்ளி அலுவலர்களும் உட்பட 27 பேர் சுட்டுக்கொல்லப் பட்ட நிகழ்ச்சியைக் குறிக்கிறது.[1]
விரைவான உண்மைகள் Sandy Hook Elementary School Shooting சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு, இடம் ...
Sandy Hook Elementary School Shooting சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு | |
---|---|
நியூட்டன் நகர் இருக்கும் இடம் ஃபேர்ஃபீல்ட் வட்டம், கனெடிகட் மாநிலம், ஐ.அ.நா. | |
இடம் | டிக்கின்சன் ட்ரைவ், சேண்டி ஹூக், கனெடிகட், ஐ.அ.நா. |
ஆள்கூறுகள் | 41°25′12″N 73°16′43″W |
நாள் | திசம்பர் 14, 2012 (2012-12-14) 9:35 a.m. to 9:39 a.m.; 9:49 a.m.[சான்று தேவை] (EST) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | சேண்டி ஹூக் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் |
தாக்குதல் வகை | பள்ளி துப்பாக்கிச் சூடு, கொலை-தற்கொலை, தாய்க் கொலை, கும்பல் கொலை |
ஆயுதம் | பள்ளிக்கூடத்தில் கண்டெடுக்கப்பட்டவை நான்கு: |
இறப்பு(கள்) | 28 (கொலையாளி உட்பட) |
காயமடைந்தோர் | 1+ |
தாக்கியோர் | ஆதாம் பீட்டர் லான்சா |
மூடு
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவரும் அலுவலர்களும் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டாவது இதுவே. இதற்கு முன் 2007ஆம் ஆண்டில் விர்ஜீனியா மாநிலத்தில் விர்ஜீனியா டெக் கல்வி நிறுவனத்தில் சூடு நிகழ்ந்தது.