செலூக்கஸ் நிக்காத்தர்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் செலூக்கசு நிக்காத்தர் (Seleucus I Nicator) பண்டைக் கிரேக்கம்: Σέλευκος Νικάτωρ (கி மு 358 – 281) அலெக்சாண்டரின் குடும்ப உறுப்பினரும், நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவருமாவார். கி மு 323 இல் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், அவர் கைப்பற்றிய பகுதிகள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஏகியன் கடலுக்குக் கிழக்கே சிரியா முதல் தற்கால இந்தியாவின் பஞ்சாப் வரை உள்ள பகுதிகளுக்கு செலூக்கியப் பேரரசிற்கு செலூக்கசு நிக்காத்தர் மன்னரானார்.
செலூக்கஸ் நிக்காத்தர் | |
---|---|
செலூக்கியப் பேரரசர் | |
செலூக்கியப் பேரரசின் முதலாம் செலூக்கசு நிக்காத்தரின் உருவச்சிலை | |
ஆட்சிக்காலம் | 305[1]–281 BC |
முன்னையவர் | பேரரசர் அலெக்சாந்தர் |
பின்னையவர் | முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் |
பிறப்பு | கி மு 358 மாசிடோனியா |
இறப்பு | கி மு 281 (76/77-வது வயதில்) திராசு (Thrace) |
துணைவர் | சோக்தியானாவின் அபாமா சிரியாவின் சிடாடோனிசு |
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் அந்தியோக்கசு சோத்தர் அசாயுசு |
வம்சம் | செலூக்கிய வம்சம் |
தந்தை | ஆண்டியோக்கசு |
தாய் | மாசிடோனியாவின் இலாடைசு |
மதம் | பண்டைய கிரேக்க சமயம் |
சந்திர குப்த மௌரியர் மீதான இரண்டு ஆண்டு காலப் போரின் (கி மு 305-303) முடிவில், செலூக்கசு நிக்கோடர், சந்திரகுப்த மௌரியருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, சிந்து ஆற்றுச் சமவெளியின் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் பகுதிகளைச் சந்திர குப்த மௌரியருக்கு வழங்கியதுடன், தனது மகளை சந்திரகுப்தருக்கு மணமுடித்து வைத்தார். சந்திரகுப்த மௌரியர், செலூக்கசு நிகோடருக்கு ஐந்நூறு போர் யானைகளைப் பரிசாக வழங்கினார். மேலும் சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலூக்கியப் பேரரசர் தனது தூதுவராக மெகசுதெனசை நியமித்தார்.[2]
கி மு 281-இல் திராசு நகரத்தில் செலுக்கசு நிக்கோடர் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மகன் முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் செலுக்காசியப் பேரரசின் மன்னரானார்.