செப்-உன்-நிசா
முகலாய இளவரசி, கவிஞர் / From Wikipedia, the free encyclopedia
செப்-உன்-நிசா (Zeb-un-Nissa;[1] 15 பிப்ரவரி 1638 - 26 மே 1702) முகலாய இளவரசியும், பேரரசர் ஔரங்கசீப்பிற்கும் அவரது மூத்த இராணியுமான தில்ராஸ் பானு பேகத்துக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார். இவர் ஒரு கவிஞரும் கூட. இவர் "மக்ஃபி" ("மறைக்கப்பட்ட ஒன்று") என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதினார்.
விரைவான உண்மைகள் செப்-உன்-நிசா, பிறப்பு ...
செப்-உன்-நிசா | |
---|---|
முகலாயப் பேரரசின் ஷா | |
தனது உதவியாளர்களுடன் இளவரசி செப்-உன்-நிசா | |
பிறப்பு | 15 பிப்ரவரி 1638 தௌலதாபாத், முகலாயப் பேரரசு, தற்போதைய இந்தியா |
இறப்பு | 26 மே 1702(1702-05-26) (அகவை 64) தில்லி, முகலாயப் பேரரசு, தற்போதைய இந்தியா |
புதைத்த இடம் | |
மரபு | தைமூர் வம்சம் |
தந்தை | ஔரங்கசீப் |
தாய் | தில்ராஸ் பானு பேகம் |
மதம் | சுன்னி இசுலாம் |
மூடு
தில்லியின் சலிம்கர் கோட்டையில் தனது வாழ்க்கையின் கடைசி 20 ஆண்டுகளில் தனது தந்தையால் சிறையில் அடைக்கப்பட்ட இளவரசி செப்-அன்-நிசா ஒரு கவிஞராக நினைவுகூரப்படுகிறார். மேலும் இவரது எழுத்துக்கள் மரணத்திற்குப் பின் திவான்-இ-மக்ஃபி என்ற பெயரில் சேகரிக்கப்பட்டன. (மக்ஃபியின் முழுமையான (கவிதை) படைப்புகள் " ). [2]