செபராங் பிறை
From Wikipedia, the free encyclopedia
செபராங் பிறை; (மலாய்: Bandaraya Seberang Perai; ஆங்கிலம்: City of Seberang Perai; சீனம்: 威省; ஜாவி: سبرڠ ڤراي) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம். பினாங்கு தீவுக்கு எதிரே அக்கரையில் அமைந்துள்ளது. இந்த மாநகரத்திற்கு வடக்கு - கிழக்கு திசைகளில் கெடா மாநிலம்; தெற்கில் பேராக் மாநிலம்; எல்லைகளாகக் கொண்டு உள்ளன.[1]
செபராங் பிறை அக்கரை | |
---|---|
மாநகரம் | |
City of Seberang Perai Bandaraya Seberang Perai | |
செபராங் பிறை (சிவப்பு) மலேசியத் தீபகற்பம் | |
ஆள்கூறுகள்: 5°24′N 100°28′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
பிரித்தானியப் பேரரசு | 17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957 |
சப்பானியப் பேரரசு | 19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945 |
மலேசியா | 31 ஆகஸ்டு 1957 |
மாநகரம் | 16 செப்டம்பர் 2019 |
செபராங் பிறை மாநகராட்சி | 1976 |
தலைநகரம் | பட்டர்வொர்த் |
அரசு | |
• செபராங் பிறை நகராட்சி மேயர் | அசார் அர்சாட் (Azhar Arshad) |
பரப்பளவு | |
• மொத்தம் | 751 km2 (290 sq mi) |
மக்கள்தொகை (ஜுலை 2018) | |
• மொத்தம் | 9,46,200 |
• அடர்த்தி | 1,089.5/km2 (2,822/sq mi) |
அஞ்சல் குறியீடு | 12xxx to 14xxx |
இணையதளம் | http://mpsp.gov.my/ |
இந்த மாநகரத்தின் நகர மையம் பட்டர்வொர்த். இதன் உள்ளூர் நிர்வாகத்திற்குப் புக்கிட் மெர்தாஜாம் நகரில் உள்ள செபராங் பிறை மாநகராட்சி பொறுப்பு வகிக்கிறது. முன்பு செபாராங் பிறை ஒரு மாவட்டமாக இருந்தது. ஆனால் 2019 செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி செபராங் பிறைக்கு மாநகரம் என தகுதி உயர்த்தப்பட்டது.[2].
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, செபராங் பிறை மக்கள் தொகை 946,200 ஆக இருந்தது. அந்த வகையில் மலேசியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமாகவும் மாறியது.