சுப்பிரமணிய சிவா
விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
விரைவான உண்மைகள் மண சிவா, பிறப்பு ...
மண சிவா | |
---|---|
![]() | |
பிறப்பு | 4 அக்டோபர் 1884 சென்னை மாகாணம், ஆங்கில அரசு |
இறப்பு | சூலை 23, 1925(1925-07-23) (அகவை 40) பாப்பாரப்பட்டி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | தொழு நோய் |
தேசியம் | இந்தியன் |
மூடு