சத்பாய் வனவிலங்கு சரணாலயம்
வங்காளதேசத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் From Wikipedia, the free encyclopedia
வங்காளதேசத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் From Wikipedia, the free encyclopedia
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் (Chadpai Wildlife Sanctuary) வங்காளதேசத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு பூங்காவாகும். 560 எக்டேர் (1400 ஏக்கர்) பரப்பளவில்[1] பேகர்காட் மாவட்டத்தின் கீழுள்ள மோங்லா துணை மாவட்டத்தில் சத்பாய் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதியன்று வங்காளதேச அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக சத்பாய் வனவிலங்கு சரணாலயம் ஒரு வனவிலங்கு சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.[2]
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் Chadpai Wildlife Sanctuary | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | பேகர்காட்டு, குல்னா, வங்காளதேசம் |
ஆள்கூறுகள் | 22.381607°N 89.656354°E |
பரப்பளவு | 560 ha (1,400 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | சனவரி 29, 2012 |
2012 ஆம் ஆண்டு வங்காளதேச அரசாங்கத்தின் கழுகு பாதுகாப்பு மண்டலம்-2 அட்டவணையின்படி இச்சரணலாயம் கழுகுகளுக்கான பாதுகாப்பான மண்டலங்களில் ஒன்றாகும்.[3] சத்பாய் சதுப்பு நிலம் வங்காளதேசத்தில் உள்ள டால்பின் சரணாலயங்களில் ஒன்றாகும்.[4][5]
9 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று ஓ.டி சதர்ன் இசுடார் 7 என்ற கொள்கலன் வாகனம் 357,000 லிட்டர் உலை எண்ணெயை ஏற்றிச் சென்றது. மற்றொரு கப்பலுடன் ஏற்பட்ட மோதலால் சுந்தரவனத்தின் கிழக்கு மண்டலத்தின் கீழுள்ள சத்பாய் வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பில் எண்ணெய் கொட்டியது.[6][7]