சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
மும்பையில் ஒரு வரலாற்று ரயில் நிலையம் / From Wikipedia, the free encyclopedia
சத்திரபதி சிவாசி முனையம் (ஆங்கிலம் : Chhatrapati Shivaji Maharaj Terminus, CSMT, மராத்தி மொழி: छत्रपती शिवाजी टर्मिनस) என்பது மும்பையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இது இயுனசுகோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[1] இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வேயின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது. இது 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது[2] இது இந்தியாவின் மிக பரபரப்பான ரயில் நிலையமாகும். முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்திரபதி சிவாசி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில்நிலையம் பிரெட்ரிக் வில்லியம் சிடீவென்சு என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (முன்னாள் விக்டோரியா தெருமினசு), வகை ...
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் (முன்னாள் விக்டோரியா தெருமினசு) | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 945 |
UNESCO region | ஆசியா மற்றும் பசிபிக் மண்டலம் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2004 (28th தொடர்) |
மூடு
விரைவான உண்மைகள் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், பொதுவான தகவல்கள் ...
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் | |
---|---|
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்தோ-சாரசனிக் |
நகரம் | மும்பை |
நாடு | இந்தியா |
கட்டுமான ஆரம்பம் | 1889 |
நிறைவுற்றது | 1897 |
செலவு | ரூபாய் 16,14,000 |
கட்டுவித்தவர் | பம்பாய் மாகாணம் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஏருமன் & பிரெட்ரிக் வில்லியம் சிடீவென்சு |
பொறியாளர் | பிரெட்ரிக் வில்லியம் சிடீவென்சு |
மூடு