சண்டி தேவி கோயில், அரித்துவார்
உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள ஒரு இந்துக் கோயில் / From Wikipedia, the free encyclopedia
சண்டி தேவி கோயில் (Chandi Devi Temple) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள புனித நகரமான அரித்துவாரில் சண்டி தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள ஓர் இந்து ஆலயமாகும். இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலைகளின் கிழக்கு உச்சியில் நீல பர்வத்தின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. சண்டி தேவி கோயில் 1929 இல் காஷ்மீர் மன்னராக இருந்த சுசத் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இருப்பினும், கோவிலில் உள்ள சண்டி தேவியின் முக்கிய மூர்த்தி 8 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தின் மிகப் பெரிய துறவிகளில் ஒருவரான ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] நீல பர்வத தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் அரித்துவாரில் அமைந்துள்ள பஞ்ச தீர்த்தங்களில் ஒன்றாகும்.
சண்டி தேவி கோயில், அரித்துவார் | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Uttarakhand" does not exist. | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்டம் |
மாவட்டம்: | அரித்துவார் |
அமைவு: | அரித்துவார் |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | ஆதி சங்கரர் |
சண்டி தேவி கோயில் சித்தர் பீடமாக பக்தர்களால் மிகவும் போற்றப்படுகிறது. இது விருப்பங்கள் நிறைவேறும் வழிபாட்டு தலமாகும். அரித்துவாரில் அமைந்துள்ள மூன்று பீடங்களில் இதுவும் ஒன்று. மானசா தேவி கோயிலும், மாயா தேவி கோயிலும் மற்ற இரண்டு இடங்களாகும் .