முதலாம் சங்கிலி
யாழ்ப்பாண அரசன் / From Wikipedia, the free encyclopedia
சங்கிலியன் பண்டாரம் அல்லது முதலாம் சங்கிலி பண்டாரம் அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவரை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவரையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.
ஏழாம் செகராசசேகரன் சங்கிலியன் | |||||
---|---|---|---|---|---|
யாழ்ப்பாண அரசன் | |||||
![]() வலப்பக்கத்தில் முதலாவதாக இருப்பது முதலாம் சங்கிலி பண்டாரம் | |||||
ஆட்சி | 1519 – 1561 | ||||
முன்னிருந்தவர் | சிங்கைப் பரராசசேகரன் (ஆறாம் பரராசசேகரன்) | ||||
புவிராஜ பண்டாரம் (ஏழாம் பரராசசேகரன்) | |||||
| |||||
மரபு | ஆரியச் சக்கரவர்த்தி பண்டாரம் இனம் | ||||
தந்தை | ஆறாம் பரராசசேகரன் | ||||
தாய் | மங்கத்தம்மாள் | ||||
அடக்கம் | நல்லூர் |