சங்ககால மூவேந்தர்
From Wikipedia, the free encyclopedia
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [1] [2] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [3] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும்
- மூவேந்தரும் ஒன்றுகூடிப் பறம்புமலையை முற்றுகையிட்டுப் பாரியை வீழ்த்தினர். [4]
- மூவர் நட்பு, இருவர் நட்பு பற்றிய செய்திகளை அவரவர் வரலாற்றில் காணலாம்