![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/6/60/Godhra_Train_Burning_Image.jpg/640px-Godhra_Train_Burning_Image.jpg&w=640&q=50)
கோத்ரா தொடருந்து எரிப்பு
From Wikipedia, the free encyclopedia
கோத்ரா தொடருந்து எரிப்பு (Godhra train burning) இந்திய மாநிலம் குசராத்தில் கோத்ரா ஊரில் 2002ஆம் ஆண்டு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் தொடருந்து வண்டியின் பயணர்பெட்டி ஒன்று இசுலாமிய[சான்று தேவை] கலகக்காரக் கூட்டத்தால் தீயிடப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். அயோத்திவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 59 இந்து பயணிகள் இறந்த இந்நிகழ்வு 790 இசுலாமியரும் 254 இந்துக்களும் பரந்தளவில் கொல்லப்பட்ட குசராத் வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்தது.[1][2][3] துவக்கத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிடப்படாத கூட்ட வன்முறை என்று விவரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் குசராத் காவல்படையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் இது இசுலாமிய குழுவொன்று 140 லிட்டர் பெட்ரோலை நிகழ்நாளுக்கு முந்தைய நாளே சேகரித்து வைத்து,[4] "கரசேவகர்களை" கொல்லத் திட்டமிட்ட சதி எனக் கண்டறிந்து வழக்காடியது.
இக்கட்டுரையில் பிழையான தகவல்கள் இருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும். விக்கிப்பீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து, சீர் செய்வதைப் பற்றி இதன் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம். |
கோத்ரா தொடருந்து எரிப்பு | |
---|---|
![]() | |
தேதி | 27 பெப்ரவரி 2002 7h43 – (UTC+5 ½) |
அமைவிடம் | கோத்ரா புகைவண்டி நிலையம் |
உயிரிழப்புகள் | |
இறப்பு(கள்) | 59 |
காயமுற்றோர் | 48 |
லாலுபிரசாத் தலைமையில் தொடருந்து அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று 2005ஆம் ஆண்டு இந்த எரிப்பு ஒரு தீ விபத்தே எனக் கூறியது.[5][6]; ஆயினும் இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டதையே குசராத் உயர்நீதிமன்றம் "சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்குப் புறம்பானது" எனத் தள்ளுபடி செய்தது. அதன்படி இக்குழுவின் எந்த முடிவும் செல்லுபடியாகாது. பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)வின் கீழ் 2005ஆம் ஆண்டு குற்றங்களை ஆய்வு செய்த மற்றொரு சட்டம்சார் குழு இந்நிகழ்வுகள் பெரும்பாலும் முசுலிம் கூட்டத்தினரால் திட்டமிடப்படாது தன்னிச்சையாக நடந்திருக்கக் கூடும் எனக் கருதியது.[7] மாநில அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு ஆணைக்குழு 2008ஆம் ஆண்டு சிறப்பு புலானாய்வுக் குழுவின் முதன்மை கூற்றின்படியே சதியொன்று தீட்டப்பட்டதாக நிறுவியது.[8] இது குறித்த விசாரணைகளின் முடிவில் நீதிமன்றம் பெப்ரவரி 2011இல் இந்நிகழ்வு ஒரு திட்டமிடப்பட்ட நாசவேலை என்றும் 31 நபர்கள் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு வழங்கியது.[9]