கேளடி நாயக்கர்கள்
கர்நாடக அரச மரபினர் / From Wikipedia, the free encyclopedia
கேளடி அல்லது கெளதி நாயக்கர்கள், (ஆட்சி காலம்: 1499–1763) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், சிமோகா மாவட்டத்தில், கெளதி எனும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு சிவப்பா நாயக்கரால் 1499இல் நிறுவப்பட்ட அரசாகும்.
விரைவான உண்மைகள் கெளதி நாயக்கர் அரசுಕೆಳದಿ ಸಂಸ್ಥಾನKeḷadi Samsthāna, தலைநகரம் ...
கெளதி நாயக்கர் அரசு ಕೆಳದಿ ಸಂಸ್ಥಾನ Keḷadi Samsthāna | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1499–1763 | |||||||||||
தலைநகரம் | கேளடி, லிக்கேரி, பிடானூர் சிமோகா மாவட்டம், கர்நாடகம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | கன்னடம் | ||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
இராஜா | |||||||||||
• 1499–1530 | சௌடப்ப நாயக்கர் | ||||||||||
• 1757–1763 | இராணி வீரம்மாஜி | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய மத்தியகால கர்நாடக வரலாறு | ||||||||||
• தொடக்கம் | 1499 | ||||||||||
• முடிவு | 1763 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு
கெளதி நாயக்கர்கள் துவக்க காலத்தில், விசயநகரப் பேரரசின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் கி பி 1565இல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைநாடு, கர்நாடக கடற்கரை பகுதி, கேரளாவின் மலபார் பகுதி, துங்கபத்திரை ஆற்றுச் சமவெளி பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர்[1] கி பி 1763இல் ஹைதர் அலியால் வெற்றி கொள்ளப்பட்டு, கெளதி நாயக்கர்கள் ஆண்ட பகுதிகள் மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது.[2]