கேலிச்சித்திர வரைஞர்
From Wikipedia, the free encyclopedia
கேலிச்சித்திர வரைஞர், வரைகதை கலைஞர்[1], ஏளன ஓவியம் வரைபவர் அல்லது வரைகதை ஓவியர் (Cartoonist) என்பர் கேலிச் சித்திரம் மற்றும் வரைகதை போன்ற துறைகளில் வரைவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு காட்சி கலைஞர் ஆவார். இவர்கள் தயாரிப்பின் ஒரு பகுதியாக கேலிச் சித்திர வேலையில் அனைத்து அம்சங்களையும் கையாளும் கலைஞர்காளாக மட்டுமே பங்களிப்பவர்கள்.
கேலிச்சித்திர கலைஞர்கள் நூல், வரைகலை நாவல்கள், அரசியல் கேலிச்சித்திரங்கள், பயனர் வழிகாட்டி, சுவரொட்டி, சட்டை, புத்தகம், விளம்பரம், வாழ்த்து அட்டை, இதழ், நாளிதழ், நிகழ்ப்பட ஆட்ட அட்டைகள் போன்ற பல்வேறு துறை வடிவங்களில் வேலை செய்யலாம்.