கூடாரம்
From Wikipedia, the free encyclopedia
கூடாரம் (tent) (/tɛnt/ (கேட்கⓘ)) என்பது ஒரு தற்காலிக வாழிடமாகும். இது நங்கூரக் கம்பங்களால் ஆன சட்டகம் மீது துணியால் போர்த்தியோ வேறுவகை மூடுபொருட்களாலோ கட்டப்படுகிறது. சிறுகூடாரங்கள் வெறுமனே துணியால் மட்டுமே போர்த்தி நிலைநிறுத்தப்படுகின்றன. பெருகூடாரங்கள் மு\ளைகளில் கயிற்றால் இழுத்துக் கட்டி நிலைநிறுத்தப்படுகின்றன. முதன்முதலில் கூடாரம் பொழுதுபோக்கிற்காகத் தற்காலிகமாகக் கட்டப்பட்டது.
இரீபீ எனப்படும் கூம்பு வடிவிலான அமைப்பையும் அதன் உச்சியில் புகை வெளிச்செல்லக் கூடிய துவாரத்தையும் கொண்ட கூடார வகை அமெரிக்கத் தாயக மக்களாலும் கனேடியத் தாயக மக்களாலும் சமவெளிப் பழங்குடிகளாலும் பண்டைய காலந்தொட்டு அதாவது பொ.ஆ.மு 10,000 [1] முதல் பொ.ஆ.மு 4000 வரையான[2] காலப்பகுதிகளில் பின்பற்றப்பட்டது.