குமாரிலபட்டர்
From Wikipedia, the free encyclopedia
குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa) (சமசுகிருதம்: कुमारिल भट्ट), கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.[1] குமரிலபட்டர் வேதத்தின் முற்பகுதியான கர்ம காண்டம் எனப்படும் பூர்வ மீமாம்சை குறித்து மீமாம்சா சுலோக வார்த்திகம் என்ற விரிவான நூலை எழுதிப் புகழ் பெற்றவர். இவரது சீடர்களில் புகழ் பெற்றவர் பிரபாகரர். குமரிலபட்டரைப் போன்றே இவரும் பல வேத தத்துவ நூல்களை எழுதிய பூர்வ மீமாம்சகர். அவர் முருகப்பெருமானின் கலியுக-அவதாரமாக சிலர் கருதுகின்றனர்.
குமரிலபட்டர் | |
---|---|
பிறப்பு | கி. பி., 700 அசாம், இந்தியா |
இறப்பு | கி. பி., 780 வாரணாசி, இந்தியா |
தத்துவம் | பாட்ட மீமாம்சா |
இந்து தத்துவவாதி |
சுருதிகளில் குறிப்பிடும் மந்திரங்கள் மற்றும் யாகம், யக்ஞம் போன்ற வைதீக கர்மங்களை மட்டுமே செய்வதன் மூலம் சொர்க்கத்தை எளிதாக அடைய முடியும் கொள்கை உடையவர். ஈஸ்வரன் எனும் இறை தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்.[2] வேதங்களில் கூறப்பட்ட சடங்குகளைச் செய்வதால் மட்டுமே ஒருவன் எளிதாக சொர்க்கத்திற்குச் செல்ல இயலும்போது, உத்தர மீமாம்சையான வேதாந்தம் எனும் உபநிடதங்கள் மூலம் பிரம்மத்தை அறிவதன் மூலம் சொர்க்கத்தை அடைய இயலாது என்ற கொள்கை கொண்டவர்.
வேதத்தை ஏற்காத பௌத்த சமயக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தனது நாவன்மையால், மன்னர்களின் அரசவையில் பௌத்தர்களை வாதில் வென்றவர். இவரது மீமாஞ்சா தத்துவ கருத்துகள் பாட்ட மீமாம்சா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.