குதுப் நினைவுச்சின்னங்கள்
கோபுரம் / From Wikipedia, the free encyclopedia
குதுப் மினார் (குத்ப் அல்லது குத்துப் என்றும் உச்சரிக்கப்படுகிறது, உருது : قطب منار ), இந்தியாவில், தில்லியில் 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குதுப்த்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். [1] இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகவும் புகழ் பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.
குதுப் நினைவுச்சின்னங்கள் | |
---|---|
குதுப் நினைவுச்சின்னங்கள் தில்லி, இந்தியா | |
வகை | பண்பாடு |
வரன்முறை | (iv) |
தெரியப்பட்டது | 1993 (17ஆம் குழு) |
உசாவு எண் | 233 |
நாடு | இந்தியா |
கண்டம் | ஆசியா |
இது பிற பல்வேறுபட்ட பழமையான, இடைக்கால கட்டமைப்புகள் மற்றும் இடிபாடுகளால் சூழ்ந்திருப்பதால், இது, குதுப் பல்கூட்டுத் தொகுதி-வளாகம் என்று அறியப்படுகிறது. இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களம் என வழங்கப்படுவதாகும். தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. மேலும் 2006 ஆம் ஆண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்த தளமாகும். அந்த ஆண்டில் 3.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் குத்துப் மினாரைக் கண்டு களித்தனர், மேலும் தாஜ் மகாலைப் பார்க்க குறைவாக சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்தனர்.[2]