உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள்
From Wikipedia, the free encyclopedia
உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், உத்திரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோவிலில், முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907–955) 12 ஆம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி 917), 14 ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் குறிக்கும். உத்திரமேரூரின் மையப்பகுதியில் தமிழர் கலைப்பாணியில் அமைந்துள்ள வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் (731-796) 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2] [3] [4][5] இங்குள்ள கல்வெட்டுக்களில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (750 கி.பி) பெயரே முதன்முதலில் இடம்பெற்றுள்ளது.[6]