![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Padre_Nostro_tamoul.jpg/640px-Padre_Nostro_tamoul.jpg&w=640&q=50)
கிறித்து கற்பித்த செபம்
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்து கற்பித்த செபம் அல்லது கர்த்தர் கற்பித்த செபம் அல்லது பரலோக மந்திரம் (The Lord's Prayer) என்பது திருத்தூதர்கள் எப்படி செபிப்பது என இயேசுவிடம் கேட்டபோது அவர் சொல்லிக்கொடுத்த செபமாகும். விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்றே சுருக்கமான வடிவத்தில் இந்த இறைவேண்டல் லூக்கா 11:2-4 பகுதியில் உள்ளது. எல்லா கிறிஸ்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்றபோதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்துவருகின்றனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Padre_Nostro_tamoul.jpg/640px-Padre_Nostro_tamoul.jpg)
ஒவ்வொரு நாளும் கத்தோலிக்க கோவில்களில் நிகழ்கின்ற திருப்பலியின்போது குருவும் மக்களும் நற்கருணை விருந்தில் பங்கேற்பதற்கு முன் இச்செபத்தை அறிக்கையிடுகின்றனர். மேலும், அன்னை மரியாவின் புகழ் சாற்றுகின்ற செபமாலை செபிக்கும்போதும், ஒவ்வொரு பத்துமணியின் தொடக்கத்திலும் இச்செபம் அறிக்கையிடப்படுகிறது.
சமயம் தொடர்பான பொது நிகழ்ச்சிகளைத் தொடங்கும் வேளையிலும் கிறிஸ்து கற்பித்த செபத்தை அறிக்கையிடும் பழக்கம் பரவலாக உள்ளது.