கிண்ணியா
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
கிண்ணியா என்பது இலங்கையின் கிழக்குக் கடற்கரையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது திருகோணமலை நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ (12 மைல்) தொலைவிலும், கொழும்பிலிருந்து 240 கிமீ (150 மைல்) தொலைவிலும் உள்ளது. இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேசம் பெரும்பாலும் மிகக் குறைந்த மழைப்பொழிவுடன் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையை அனுபவிக்கிறது. கிண்ணியா பாலம் இலங்கையின் மிக நீளமான பாலமாகும், இது நகரத்தில் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது.
கிண்ணியா
KINNIYA
كينيا
ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர். [1] இவர்களில் 97% தமிழ் பேசும் முஸ்லிம்களும், ஏனையோர் தமிழர்களும் ஆவர்.
2004 ஆழிப்பேரலையின் போது இந்நகர் பெரும் அழிவைச் சந்தித்தது.