![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Shep02_bessarabia.jpg/640px-Shep02_bessarabia.jpg&w=640&q=50)
காணாமல் போன ஆடு உவமை
From Wikipedia, the free encyclopedia
காணாமல் போன ஆடு இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமானக் கதையாகும். இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் முதலாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன காசு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது. இது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளது. லூக்கா 15:1-7,மத்தேயு 18:12-13.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Shep02_bessarabia.jpg/320px-Shep02_bessarabia.jpg)