![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Cirrhosis_high_mag.jpg/640px-Cirrhosis_high_mag.jpg&w=640&q=50)
கல்லீரல் இழைநார் வளர்ச்சி
From Wikipedia, the free encyclopedia
கல்லீரல் இழைநார் வளர்ச்சி (ஒலிப்பு: /sɪˈroʊsɪs/) என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைநார்ப் பெருக்கம் , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்),[1][2][3] போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய மூலமறியா தான்தோன்றியானவை,
கல்லீரல் இழைநார் வளர்ச்சி | |
---|---|
![]() | |
கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் ஓர் நுண்வரைவி. டிரைகுரோம் கறையில். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல், hepatology |
ஐ.சி.டி.-10 | K70.3, K71.7, K74. |
ஐ.சி.டி.-9 | 571 |
நோய்களின் தரவுத்தளம் | 2729 |
ஈமெடிசின் | med/3183 radio/175 |
பேசியண்ட் ஐ.இ | கல்லீரல் இழைநார் வளர்ச்சி |
ம.பா.த | D008103 |
நீர்க்கோவை அல்லது மகோதரம் (அடிவயிற்று உட்குழிவில் திரவம் சேகரித்தல்) என்பது கல்லீரல் அழற்சியின் மிகவும் பொதுவான பிரச்சினை. இது மோசமான வாழ்க்கைத் தரம், தொற்றுநோய் அபாய அதிகரிப்பு மற்றும் மோசமான நீண்டகால விளைவுகளை ஏற்டுத்துகிறது. கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (மனக்குழப்பம் மற்றும் ஆழ்மயக்கம்) மற்றும் உணவுக்குழாய் தட்டமையால் ஏற்படும் இரத்தப்போக்கு என்பன உயிருக்கு அபாயமுள்ள பிற சிக்கல்களாகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சி பொதுவாக குணமாக்க இயலாத நோய்; எனவே இதன் சிகிச்சை நோய் தீவிரமாவதைத் தடுத்தல் மற்றும் பிற சிக்கல்களில் கவனம் செலுத்துகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் முற்றிய நிலைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு.
இந்த நோயைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் "சிர்ரோசிஸ்" கிரேக்கத்தைச் சேர்ந்த κίρῥος என்பதிலிருந்து வந்தது, அதாவது பழுப்பு மஞ்சள் (நோயுற்ற கல்லீரல் ஆரஞ்சு-மஞ்சள் நிறமடைந்திருப்பது). இதனுடைய மருத்துவ உட்பொருள் அறியப்படும் முன்னரே ரெனே லேன்னக் என்பவர்தான் இதயத்துடிப்புமானி பற்றி விவரித்த புத்தகத்தில் இதற்கு 1819 ஆம் ஆண்டில் இப்பெயரை வழங்கினார்.[4]