கல்முனை
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
கல்முனை (Kalmunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் தமிழர், சிங்களவர்,முஸ்லிம், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும். கல்முனை தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் கல்முனை Kalmunai, நாடு ...
கல்முனை
Kalmunai | |
---|---|
நகரம் | |
கல்முனை | |
ஆள்கூறுகள்: 7°25′00″N 81°49′00″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பி.செ. பிரிவு | கல்முனை |
அரசு | |
• வகை | மாநகர சபை |
மக்கள்தொகை (2011[1]) | |
• மொத்தம் | 1,06,780 |
• அடர்த்தி | 4,726/km2 (12,240/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
மூடு