கலித்துறை
From Wikipedia, the free encyclopedia
கலித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இது பல்வேறு ஓசைகள் உடையது. நெடிலடிகள் நான்கு கொண்டிருக்கும். அவை நான்கும் எதுகை கொண்டிருக்கும். ஆழ்வார் பாடல்கள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற படைப்புகளில் இப்பாவினம் மிகுந்து காணப்படுகிறது. கட்டளைக் கலித்துறை இதன் வகைகளில் ஒன்று.[1] [2] இதில் கலி மண்டிலத் துறை [3] கலி நிலைத் துறை [4] என இரண்டு வகைகள் உண்டு. [5]
- எடுத்துக்காட்டு 1
நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே....
- சம்பந்தர் தேவாரம், 1058