கர்நாடக வரலாறு
From Wikipedia, the free encyclopedia
எழுதப்பட்ட கர்நாடக வரலாறு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது. பல பேரரசுகள் மற்றும் மரபினர் கர்நாடகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். மேலும் கர்நாடகத்தின் வரலாறு, பண்பாடு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு பெருமளவில் பங்காற்றியுள்ளனர்.
கர்நாடக மரபினரின் ஆட்சிகளின் தாக்கமானது இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக நடு இந்தியாவின் சிந்தக்க நாகர், கலிங்கத்தின் கங்கர் (ஒடிசா),[1] மான்யகட்டாவின் இராட்டிரக்கூடர்கள்,[2] வேங்கி சாளுக்கியர்கள்,[3] தேவகிரி யாதவர்கள் ஆகிய அனைவரும் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்,[4] என்றாலும் பிற்காலத்தில் இவர்கள் அந்தந்த உள்ளூர் மொழிகளை ஏற்றுக்கொண்டனர்.