![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Opened_Oral_Birth_Control.jpg/640px-Opened_Oral_Birth_Control.jpg&w=640&q=50)
கருத்தடை
From Wikipedia, the free encyclopedia
கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும்.[1] இதனைப் பிறப்புக் கட்டுப்பாடு, கருத்தரிப்புத் திறன் கட்டுப்பாடு எனவும் அழைக்கலாம். குழந்தை கிடைப்பதற்காகத் திட்டமிடல், கருத்தரிப்பு, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல், மற்றும் கருத்தடை திட்டமிடல் அனைத்தும் இணைந்ததே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைக் காலங்களில் இருந்து, கருத்தடை வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பயன்பாடான மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் 20-ஆம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கத் தொடங்கின.[2]
பல மதங்கள், கலாசாரங்கள் கருத்தடை தொடர்பில் எதிர்ப்புணர்வு கொண்டுள்ளன. ஒழுக்கநெறிகளின்படி, மதரீதியாக அல்லது அரசியல்ரீதியாகப் கருத்தடை விரும்பத்தகாதது என்று சில கலாச்சாரங்கள் கருதுவதால் அவை கருத்தடையை ஊக்கப்படுத்திவதில்லை.[2] இருப்பினும் கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் கருத்தடைக்கான எதிர்ப்பு குறைவானதாகவே உள்ளது.[3] சிலர் பாலுறவு கொள்ளாமல் இருப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தாலும், இணக்கத்தன்மை இல்லாத காரணத்தால், கருத்தடை அறிவைத் தவிர்த்துவிட்டு, பாலுறவு தொடர்பான கல்வியை வழங்குதல், பதின்ம வயதினரின் கருத்தரிப்பை அதிகரிக்கவே செய்யும்.[4][5]
வளர்ந்துவரும் நாடுகளில், கிட்டத்தட்ட 222 மில்லியன் பெண்கள் நவீனப் பிறப்புக் கருத்தடை வழிமுறையைப் பயன்படுத்துவதில்லை.[6][7] வளர்ந்த நாடுகளில் கருத்தடைப் பயன்பாடு காரணமாக, கர்ப்பகாலத்தில் அல்லது அதை அண்மித்த காலத்தில் நிகழும் மரணங்களின் அளவு 40% த்தால் குறைத்துள்ளது (அண்ணளவாக 270,000 மரணங்கள் 2008 இல் தடுக்கப்பட்டுள்ளன). அத்துடன் கருத்தடைக்கான முழுத் தேவையும் பூர்த்திசெய்யப்பட்டிருந்தால், அது 70% அளவுக்குத் தடுக்கப்பட்டிருக்கக்கூடும்.[8][9] இவை தவிர, கருத்தரித்தலைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தும் ஆணுறை, பெண்ணுறை போன்றன பால்வினை நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பையும் அளிக்கும்.[10] ஆனால் ஏனைய கருத்தடை முறைகள் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க முடியாதவையாக இருப்பதனால், இவ்வகையான நோய்ப் பாதுகாப்பை அழிப்பதில்லை.[11]
கருப்பங்களுக்கு இடையிலான காலத்தின் இடைவெளியை அதிகரிப்பதன் மூலமாக, கருத்தடை நடைமுறை மூலம், வயதுவந்த பெண்களின் பிரசவ விளைவுகளிலும், அவர்களின் குழந்தைகளின் உயிர் வாழும் திறனிலும் முன்னேற்றத்தைக் காணலாம்.[8] வளர்ந்த உலக நாடுகளில் பெண்களின் சம்பளம், சொத்துகள், உடல் எடை மற்றும் அவர்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்வி, உடல்நலம் ஆகிய அனைத்தும் கருத்தடைக்குக் கிடைக்கும் அணுகலை மேம்படுத்தும்.[12] சார்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சி, உழைப்பாளர் பிரிவில் அதிகரிக்கும் பெண்கள் பங்கேற்பு, மற்றும் அரிய மூலவளங்களின் குறைவான பயன்பாடு போன்ற காரணங்களால், கருத்தடை மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.[12][13]