கரக்பூர்
From Wikipedia, the free encyclopedia
கரக்பூர் (ஆங்கிலம்: Kharagpur) ( ஒலிப்புⓘ, வங்காள மொழி: খড়্গপুর) இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலை நகரம். இது மாவட்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட, பல கலாச்சார மற்றும் அண்டவியல் நகரமாகும்[1] . இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி) நிறுவப்பட்டபோது முதலில் அமைந்த வளாகம் கரக்பூராகும். இங்கு பெரும் தொடர்வண்டி பட்டறைகளும் உலகின் நீளமான [1072.5 மீ] தொடர்வண்டி நடைமேடையும் உள்ளன.[2]
கலைகுன்டா மற்றும் சலுவா என்ற இடங்களில் இந்திய வான்படை நிலையங்கள் உள்ளன.