![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Capernaum_ruins_by_David_Shankbone.jpg/640px-Capernaum_ruins_by_David_Shankbone.jpg&w=640&q=50)
கப்பர்நாகும்
From Wikipedia, the free encyclopedia
கப்பர்நாகும் (Capernaum - எபிரேய மொழியில் כְּפַר נַחוּם Kfar Nahum = "நாகும் நகர்") என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பாலஸ்தீன ஊர் ஆகும்[1]. அங்கு மீன்பிடித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஊர் கலிலேயக் கடல் என்று அழைக்கப்படுகின்ற கெனசரேத்து ஏரிக்கரையில் அமைந்தது. இங்கு சுமார் 1500 மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அகழ்வாய்வுப்படி, இங்கு ஒன்றன்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட இரண்டு யூத தொழுகைக் கூடங்கள் இருந்தன. இந்த ஊரின் அருகில் உள்ள கிறித்தவக் கோவில் முன்னாள்களில் புனித பேதுருவின் வீடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Capernaum_ruins_by_David_Shankbone.jpg/640px-Capernaum_ruins_by_David_Shankbone.jpg)
கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் கப்பர்நாகும் கைநெகிழப்பட்டது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆகழாய்வுகளின் பயனாக இன்று அதன் சீரும் சிறப்பும் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன.