![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/Oscar_Wilde_portrait_by_Napoleon_Sarony_-_albumen.jpg/640px-Oscar_Wilde_portrait_by_Napoleon_Sarony_-_albumen.jpg&w=640&q=50)
ஆஸ்கார் வைல்டு
From Wikipedia, the free encyclopedia
ஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார். இவரது சில நாடகங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன. இவர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான பல வழக்குகளால் இவர் பெரும் வீழ்ச்சிக்கு உட்பட்டதுடன், பிற ஆண்களுடன் "நாகரிகமற்றமுறையில்" நடந்துகொண்டமைக்காக இரண்டு ஆண்டுக் கடூழியச் சிறைத் தண்டனையும் பெற்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அவர் இரவோடு இரவாகப் படகு மூலம் பிரான்சிலுள்ள டியப் நகருக்கு சென்றுவிட்டார். அவர் பின்னர் பிரித்தானியாவுக்குத் திரும்பவே இல்லை.
ஆஸ்கார் வைல்டு | |
---|---|
![]() நெப்போலியன் சரோனி என்பவரால் 1882 இல் எடுக்கப்பட்ட நிழற்படம். | |
பிறப்பு | ஆஸ்கார் வைல்டு (1854-10-16)16 அக்டோபர் 1854 டப்ளின், அயர்லாந்து |
இறப்பு | 30 நவம்பர் 1900(1900-11-30) (அகவை 46) பாரிஸ், பிரான்ஸ் |
தொழில் | நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர் |
தேசியம் | ஐரியர் |
காலம் | விக்டோரியாக் காலம் |
கையொப்பம் | |
![]() |