ஐராவதம்
இந்திரனது வாகனமான யானையின் பெயர் / From Wikipedia, the free encyclopedia
ஐராவதம் என்பது நான்கு தந்தங்கள் மற்றும் ஏழு தும்பிக்கைகள் கொண்ட வெள்ளை நிறத்தால் ஆனா ஒரு தெய்வீக யானையாகும். இது "யானைகளின் அரசன்" எனவும், தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனமாகவும் கருதப்படுகின்றது. இது அப்ரா-மதங்கா ("மேகங்களின் யானை"), நாக-மல்லா ("சண்டை யானை") மற்றும் அர்கசோதரா ("சூரியனின் சகோதரர்") என்றும் அழைக்கப்படுகின்றது. ஐராவதம் ஐராவதியின் மூன்றாவது மகனாக கருதப்படுகின்றது. அபிராமு என்ற யானை ஐராவதத்தின் மனைவியாக குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்தில் இது ஒரு பெரிய பாம்பாக சித்தரிக்கப்படுகின்றது. [1]