![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Enheduanna%252C_daughter_of_Sargon_of_Akkad.jpg/640px-Enheduanna%252C_daughter_of_Sargon_of_Akkad.jpg&w=640&q=50)
என்ஹெடுவானா
சுமேரிய இளவரசி, உலக வரலாற்றில் அறியப்பட்ட முதல் பெண் கவிஞர் / From Wikipedia, the free encyclopedia
என்ஹெடுவானா (Enheduanna; (அக்காதியம்: 𒂗𒃶𒁺𒀭𒈾, Enheduana அல்லது En-hedu-ana மாற்று வடிவங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;[1] கி.மு 23 ஆம் நூற்றாண்டு )[2] என்பவர் அக்காடியப் பேரரசின் மன்னரான சார்கோனின் மகள் மற்றும் சுமேரியா நகரமான ஊர் என்ற நகரத்தில் இருந்த நானா என்றழைக்கப்பட்ட நிலவுக் கடவுளின் கோயிலின் பூசாரி ஆவார்.[3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Enheduanna%2C_daughter_of_Sargon_of_Akkad.jpg/640px-Enheduanna%2C_daughter_of_Sargon_of_Akkad.jpg)
என்ஹெடுவானா சில இலக்கியப் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இவை இவராலேயே இயற்றப்பட்டவை. இவர் இயற்றிய பாடல்களில் தன் வாழ்க்கையைப் பற்றியும் தன்பெயரையும் குறிப்பிட்டுள்ளார். என்ஹெடுவானாவின் படைப்புகள் சடங்கு சார்ந்தவை, புவி, அன்பு, வளம் ஆகியவற்றுக்கான சுமேரியக் கடவுளான இனான்னா, நிலவுக்கடவுள் மற்றும் சுமேரியக் கோயில்கள் பற்றியும் மிகுதியாகப் பாடி இருக்கிறார்.[4]). இவர் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளராகவும், முதல் பெண் கவிஞராகவும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.[5]
இவர்தான் ஈஎன் என்ற பட்டத்துடன் குறிப்பிடப்படும் முதல் பெண்ணாவார், இவர் இளவரசியாக இருந்ததால் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் கொண்டவராக இருந்தார்.[6] இவரது தந்தையால் இவருக்கு கோயில் அர்ச்சகி பொறுப்பு அளிக்கப்பட்டது. இவரின் தாயார் அரசி தாசுல்தும்மாக இருக்கலாம்.[7][8]
இவர் தனது சகோதரன் ரிமூசின் காலத்திலும் தனது பதவியில் தொடர்ந்தார். பின்னர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு வெளியேற்றப்பட்டார். நாளடைவில் மீண்டும் தன் அர்ச்சகி பதவியை அடைந்தார்.