From Wikipedia, the free encyclopedia
அரோகள்ளி சீனிவாசயா துரைசாமி (Harohalli Srinivasaiah Doreswamy) (பிறப்பு 1918 ஏப்ரல் 10) ஒரு இந்திய ஆர்வலரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார். இவர் ஏப்ரல் 2018 இல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர். [1]
எச். எஸ். துரைசாமி | |
---|---|
பிறப்பு | அரோகள்ளி சீனிவாசயா துரைசாமி 10 ஏப்ரல் 1918 அரோகள்ளி, மசூரு மாநிலம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மத்திய கல்லூரி, பெங்களூரு |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
பெற்றோர் | சிறீநிவாச ஐயர் (தந்தை) பத்வதம்மா (தாயார்) |
வாழ்க்கைத் துணை | இலலிதாம்மா (1950) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | எச். எஸ். சீதாராம் (சகோதரன்) இரத்தினம்மா (அண்ணி) |
விருதுகள் | பசவ புரஸ்கார் |
பிரித்தானிய இந்திய சாம்ராஜ்யத்தின் சுதேச மாநிலமான மைசூர் இராச்சியத்தில் அரோகள்ளி கிராமத்தில் எச். எஸ். துரைசாமி பிறந்தார். இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் காலமான பிறகு இவரை அவரது தாத்தா சிறீ சாமன்னா என்பவர் வளர்த்தார். [2] எச்.எஸ். சீதாராம் என்ற பெயரில் இவருக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். பின்னர் இவர் சுதந்திர இந்தியாவில் பெங்களூரின் நகரத் தந்தையானார் . [3] இவரது தாத்தா ஒரு கிராம கணக்காளர் மற்றும் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்த இவர், பின்னர் உயர் கல்வியை முடிக்க பெங்களூருக்குச் சென்றார். தனது மேல்நிலைக் கல்விக்காக பெங்களூரு அரசு இடைநிலைக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பெங்களூரு மத்திய கல்லூரியில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். [4]
1942 சூனில் கல்வியை முடித்த பின்னர், பெங்களூருவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்பிக்கத் தொடங்கினார். ஆகத்து மாதம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது, பிரித்தானிய இராச்சியத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதற்காக பின்பற்றப்பட்ட ஒரு முறையாக உத்தியோகபூர்வ ஆவணங்களை எரிக்க அஞ்சல் பெட்டிகளிலும் பதிவு அறைகளிலும் சிறிய அளவிலான நேர வெடிகுண்டுகளை அமைப்பதில் இவர் ஈடுபட்டார். இவர் சில கூட்டாளிகளுடன் பழைய மைசூர் பிராந்தியத்தில் போராட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபட்டார். [5] ராஜா, மினெர்வா மற்றும் பின்னி ஆலைகள் ஆகிய மூன்று துணி ஆலைகளில் 14 நாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்வதில் சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடைமை கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான என்.டி.சங்கருடன் இவர் இணைந்து பணியாற்றினார். இதில் 8,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, பின்வரும் 3 முதல் 30 நாட்களுக்குள் இப்பகுதி முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளில் வேலைநிறுத்தங்கள் நடந்தன. அந்த நேரத்தில் நிலத்தடியில் இருந்த ஏ.ஜி.ராமச்சந்திர ராவ் மற்றும் சர்தார் வெங்கடராமையா ஆகியோருடன் இவர் சங்கங்களை உருவாக்கினார்.
1950களில், பூமிதான இயக்கம் மற்றும் கர்நாடக ஐக்கியத்திற்கான இயக்கத்தில் பங்கேற்றார். [6] 1975 ஆம் ஆண்டில், இந்திரா காந்தி இந்தியாவில் நெருக்கடி நிலையின் போது "ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து கொண்டதற்காக" அவருக்கு எதிராக ஒரு போராட்டத்தைத் தொடங்குவதாக அச்சுறுத்திய கடிதத்தை அனுப்பிய பின்னர் இவர் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
துரைசாமி 2019-2020 இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்கிறார். [7] அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நிலைமை பிரித்தானிய இராச்சியம் உருவாக்கியதைப் போலவே மாறிவருவதாக துரைசாமி கூறியுள்ளார். [8] நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் அரசாங்கத்தால் நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் இவர் கூறியுள்ளார். [9]
1950 ஆம் ஆண்டில், துரைசாமி அப்போது 18 வயதாக இருந்த லலிதாம்மா என்பவரை மணந்தார். [10] லலிதாம்மா 2019 தி சம்பர் 17 அன்று தனது 89 வயதில் காலமானார். [11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.