உதயதாரகை
From Wikipedia, the free encyclopedia
உதயதாரகை (Morning Star) ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும்.[1] ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசன் மூலம் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது இதழ் 1841 சனவரி 7 இல் வெளிவந்தது.[1] இப் பத்திரிகை தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது.