இலஞ்சிதார மேளம்
From Wikipedia, the free encyclopedia
இலஞ்சித்தார மேளம் (மலையாளம் : ഇലഞ്ഞിത്തറമേളം) என்பது கேரளத்தின், திருச்சூர் பூரத்தின் போது திருச்சூர் நகரில் உள்ள வடக்குநாதன் கோயிலின் முற்றத்தில் உள்ள இலஞ்சி (வகுளம்) மரத்திற்கு அருகில் இசைக்கும் மேளக் கலைஞர்ர்களின் கச்சேரியாகும். இது கேரள பாரம்பரிய இசையின் சிறந்த தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மேலும் வேறு எந்த பூரம் விழாக்களைவிட மேளக் கலைஞர்கள் மிகுதியாக்க் கூடும் இடம் இதுவாகும். தொழில்நுட்ப துல்லியம் மற்றும் கருவி ஒழுக்கம் கொண்ட மேளத்திற்கு பாண்டி மேளம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். [1] [2] [3]