இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பத்தொன்பதாவது திருத்தம்
From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கான 19வது திருத்தம் (19th Amendment to the Constitution of Sri Lanka) 2015 ஏப்ரல் 28 அன்று 225-உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 215 வாக்குகளை ஆதரவாகப் பெற்று நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்திற்கு ஒருவர் எதிராக வாக்களித்தார். ஏழு பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.[1] 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். செயரவர்தனா அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற அதிகார அரசுத்தலைவரான பின்னர் இடம்பெற்ற மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசமைப்புத் திருத்தச் சட்டம் இதுவெனக் கணிக்கப்படுகிறது.[2]